
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையே ஒருநாள் கிரிக்கெட் தொடர் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்தியா ஏற்கனவே 2 வெற்றிகளை பெற்று அசத்தியுள்ளது. இதனையடுத்து கடைசி மற்றும் 3வது போட்டி நாளை இந்தூரில் உள்ள மைதானத்தில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த தொடரில் இஷான் கிஷானுக்கு பெரும் சிக்கல் உருவாகியுள்ளது. முதல் ஒருநாள் போட்டியின் போது விக்கெட் கீப்பராக செயல்பட்ட இஷான், டாம் லேதமை பந்து எதுவும் இல்லாமல் ஸ்டம்பிங் செய்து ஏமாற்றினர். இதற்காக நடுவர்களிடம் அப்பீலும் கேட்கப்பட்டு, பின்னர் நாட் அவுட் கொடுக்கப்பட்டது. ஹர்திக் பாண்ட்யாவை இதே போல டாம் லேதம் அவுட்டாக்கியிருந்ததால் இஷானும் இது போன்று செய்திருந்தார்.
ஆனால் காமெடியாக செய்த விஷயம் விணையாகியுள்ளது. ஐசிசியின் விதிமுறையில் 2.15 விதிகளின்படி போலியான விஷயங்களை செய்து நடுவர்களிடம் ஆதாயம் பெற முயன்றதாக இது எடுத்துக்கொள்ளப்படும். இதற்காக அந்த வீரருக்கு 4 ஒருநாள் போட்டிகள் அல்லது 12 டி20 போட்டிகளில் விளையாட தடைவிதிக்கப்படும்.