
டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணி சூப்பர் 12 சுற்றின் முதல் போட்டியில் வரும் 24ஆம் தேதி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. விராட் கோலி தலைமையில் முதல் ஐசிசி கோப்பையை கைப்பற்றும் முனைப்பில் இந்த உலக கோப்பை தொடரில் இந்திய அணி களமிறங்குகிறது.
விராட் கோலி தலைமையிலான இந்திய அணி அனுபவமும் இளமையும் கலந்த வலுவான அணியாக உள்ளது. இந்திய அணியில் பெரிதும் நம்பிக்கை வைத்து எடுக்கப்பட்ட சூர்யகுமார் யாதவ் மோசமான ஃபார்மில் இருப்பது கவலையளிக்கும் விஷயம்.
ஐபிஎல் 14வது சீசனில் அமீரகத்தில் நடந்த 2ம் பாகத்தில் 7 போட்டிகளில் வெறும் 144 ரன்கள் மட்டுமே அடித்தார் சூர்யகுமார். அதில் 82 ரன்கள் ஒரே போட்டியில் அடித்தார். மீதம் 6 போட்டிகளில் 62 ரன்கள் மட்டுமே அடித்தார். சூர்யகுமார் யாதவின் ஃபார்ம் கவலையளிக்கும் நிலையில், இஷான் கிஷன் நல்ல ஃபார்மில் அபாரமாக ஆடிவருவது இந்திய அணிக்கு நல்ல விஷயம்.