பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் 9ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. இத்தொடரில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் முகமது ரிஸ்வான் தலைமையிலான முல்தான் சுல்தான்ஸ் அணியை எதிர்த்து, ஷதாக் கான் தலைமையிலான இஸ்லாமாபாத் யுனைடெட் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கராச்சியிலுள்ள தேசிய கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற முல்தான் சுல்தான்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
இதையடுத்து களமிறங்கிய முல்தான் சுல்தான்ஸ் அணியின் தொடக்க வீரர் யசிர் கான் 6 ரன்னிலும், அடுத்து களமிறங்கிய டேவிட் வில்லி 6 ரன்களிலும் என விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். பின்னர் இணைந்த கேப்டன் முகமது ரிஸ்வான் - உஸ்மான் கான் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்ததுடன் அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினார்.
அதன்பின் 26 ரன்களில் முகமது ரிஸ்வான் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து அரைசதம் கடந்த இலையில் 57 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய இஃப்திகார் அஹ்மாத் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 3 பவுண்டரி, 3 சிக்சர்களுடன் 32 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருக்க, மறுபக்கம் களமிறங்கிய வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர்.