Advertisement

இது மிகவும் நெருக்கமான போட்டியாக இருந்தது - அஜிங்கியா ரஹானே!

நீங்கள் ஒன்று அல்லது இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெறும்போது அது உங்களுக்கு நிறைய திருப்தியைத் தருகிறது என கேகேஆர் அணி கேப்டன் அஜிங்கியா ரஹானே தெரிவித்துள்ளார்.

Advertisement
இது மிகவும் நெருக்கமான போட்டியாக இருந்தது - அஜிங்கியா ரஹானே!
இது மிகவும் நெருக்கமான போட்டியாக இருந்தது - அஜிங்கியா ரஹானே! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
May 04, 2025 • 10:24 PM

ஐபிஎல் தொடரில் இன்று ஈடன் கார்டன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற லீக் போடியில் ரியான் பராக் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை ஒரு ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி அஜிங்கியா ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. 

Bharathi Kannan
By Bharathi Kannan
May 04, 2025 • 10:24 PM

இப்போட்டியின் வெற்றி குறித்து பேசிய அஜிங்கியா ரஹானே, “இது மிகவும் நெருக்கமான போட்டியாக இருந்தது, ஆனால் இறுதியில் நாங்கள் வெற்றிபெற்றது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது, நீங்கள் ஒன்று அல்லது இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெறும்போது அது உங்களுக்கு நிறைய திருப்தியைத் தருகிறது. குர்பாஸ் மற்றும் அங்கிரிஷ் நன்றாக விளையாடினார்கள், இறுதி ஓவர்களில் ஆண்ட்ரே ரஸலின் பேட்டிங் மிகவும் நன்றாக இருந்தது.

பவர்பிளேயில் கடுமையாகச் செயல்பட்டு, பின்னர் 12ஆவது ஓவர் வரை நிலைமையை நிலைப்படுத்துவதே எங்களின் திட்டம். ஒரு புதிய பேட்டருக்கு இது எளிதானது அல்ல, எனவே நானும் அங்கிரிஷும் அதை ஆழமாக எடுத்துச் செல்வது பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். அதேபோல் ஃபீல்டிங்கில் நீங்கள் 10-12 ரன்களைச் சேமிக்க முடிந்தால் அது மிகவும் நல்லது. நீங்கள் ஒரு சில நல்ல கேட்சுகளை எடுத்திருந்தோம். அது இப்போட்டியில் வித்தியாசத்தை ஏற்படுத்தியது” என்று தெரிவித்துள்ளார். 

இப்போட்டி குறித்து பேசினால், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த கேகேஆர் அணியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆண்ட்ரே ரஸல் 4 பவுண்டரிகள், 6 சிக்ஸர்கள் என 57 ரன்களையும், அங்கிரிஷ் ரகுவன்ஷி 44 ரன்களையும், இறுதியில் ரிங்கு சிங் ஒரு பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 19 ரன்களையும் சேர்த்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதன்மூலம் கேகேஆர் அணி இன்னிங்ஸ் முடிவில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 206 ரன்களைச் சேர்த்தது.

Also Read: LIVE Cricket Score

பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் அபாரமாக விளையாடிய ரியான் பராக் 6 பவுண்டரி 8 சிக்ஸர்களுடன் 95 ரன்னிலும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 34 ரன்னிலும், ஷிம்ரான் ஹெட்மையர் 29 ரன்னிலும், இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஷுபம் தூபே 25 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் பெரிதளவில் ரன்களைச் சேர்க்க தவறினர். இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 205 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியைச் சந்தித்துள்ளது.  

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement
Advertisement