
ஐபிஎல் தொடரில் இன்று ஈடன் கார்டன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற லீக் போடியில் ரியான் பராக் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை ஒரு ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி அஜிங்கியா ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
இப்போட்டியின் வெற்றி குறித்து பேசிய அஜிங்கியா ரஹானே, “இது மிகவும் நெருக்கமான போட்டியாக இருந்தது, ஆனால் இறுதியில் நாங்கள் வெற்றிபெற்றது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது, நீங்கள் ஒன்று அல்லது இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெறும்போது அது உங்களுக்கு நிறைய திருப்தியைத் தருகிறது. குர்பாஸ் மற்றும் அங்கிரிஷ் நன்றாக விளையாடினார்கள், இறுதி ஓவர்களில் ஆண்ட்ரே ரஸலின் பேட்டிங் மிகவும் நன்றாக இருந்தது.
பவர்பிளேயில் கடுமையாகச் செயல்பட்டு, பின்னர் 12ஆவது ஓவர் வரை நிலைமையை நிலைப்படுத்துவதே எங்களின் திட்டம். ஒரு புதிய பேட்டருக்கு இது எளிதானது அல்ல, எனவே நானும் அங்கிரிஷும் அதை ஆழமாக எடுத்துச் செல்வது பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். அதேபோல் ஃபீல்டிங்கில் நீங்கள் 10-12 ரன்களைச் சேமிக்க முடிந்தால் அது மிகவும் நல்லது. நீங்கள் ஒரு சில நல்ல கேட்சுகளை எடுத்திருந்தோம். அது இப்போட்டியில் வித்தியாசத்தை ஏற்படுத்தியது” என்று தெரிவித்துள்ளார்.