ஐபிஎல் 2022: ஃபார்முக்கு திரும்பியது குறித்து பேசிய விராட் கோலி!
குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான போட்டியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியது குறித்து ஆர்சிபி வீரர் விராட் கோலி மனம் திறந்துள்ளார்.

"It has been a challenging time" - Virat Kohli opens up on his lean patch in IPL 2022 (Image Source: Google)
நடப்பு ஐபிஎல் சீசினில் 3 முறை கோல்டன் டக்கான விராட் கோலி, நேற்று குஜராத்துக்கு எதிரான ஆட்டத்தில் ஃபார்ம்க்கு திரும்பினார். 54 பந்துகளை எதிர்கொண்ட விராட் கோலி, 8 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் உள்பட 73 ரன்களை விளாசி அசத்தினார்.
இதுகுறித்து பேசிய அவர், “தொடர்ந்து அவுட்டாகி வந்ததும், எனக்கு என்ன நடக்கிறது என்று நானே யோசிக்க தொடங்கிவிட்டேன். 2018ஆம் ஆண்டு இங்கிலாந்து தொடரின் போது என் கேட்ச் மிஸ் ஆனது, அப்போது 2014ஆம் ஆண்டு சொதப்பியது நினைவுக்கு வந்தது. ஆனால் அன்று சதம் விளாசினேன். அதன் பிறகு நான் சிறப்பாக விளையாட தொடங்கினேன். இது போல் நிறைய முறை நிகழ்ந்துள்ளது. ஆனால் அப்போது எல்லாம் (கேட்ச் மிஸ்சாகி வாய்ப்பு கிடைக்கிறதே என) ஏமாற்றமாக இருக்கும். அதற்காக வருத்தப்பட்டு கொண்டு இருப்பது நியாயம் அல்ல.
ஏனென்றால் நான் பல முறை ஆசிர்வதிக்கப்பட்டு இருக்கிறேன். நான் எப்போதும் போல் தீவிரமாக உழைக்க விரும்புகிறேன். அணிக்கு வெற்றியை தேடி தர விரும்புகிறேன். கடினமாக உழைக்கும் போது, அதற்கான மாற்றங்கள் உடனே நிகழாது. அப்படி நடக்கும் சமயத்தில் முன்பை விட அதிகமாக உழைக்க வேண்டும். சரியான அணுகுமுறையும் தேவை.
நாம் பலமுறை சிறப்பாக விளையாடி பல சாதனைகளை படைத்திருப்போம். ரசிகர்கள் நம் சாதனைகளை கொண்டாடி இருப்பார்கள். அந்த சாதனைகள் நம் கண்ணை மறைக்கும். தொடர்ந்து சிறப்பாக விளையாடுவதால், ஆட்டத்துக்கு தயாராகும் முறை நமக்கு தேவைப்பட்டு இருக்காது. அதற்காக தான் மீண்டும் அடிப்படை நோக்கி நாம் நகர வேண்டும். எந்த பந்தை எப்படி அடிக்க வேண்டும் என்பது குறித்து யோசிக்க வேண்டும்.
சில சமயம், நம் மனதில் எந்த பந்தை எப்படி அடித்தால் சரியாக இருக்கும் என்பதை விட, அப்படி எல்லாம் அடித்தால் தவறு நிகழ்ந்து விடுமோ என்று தான் யோசிக்க தோன்றும். இதனால் இன்றைய ஆட்டத்திற்காக நான் கடுமையாக உழைத்தேன். 90 நிமிடம் வலைப் பயிற்சியில் ஈடுபட்டேன். எந்த பந்தை எப்படி அணுக வேண்டும் என்ற தெளிவு நேற்றைய பயிற்சியின் போது கிடைத்தது. இதனால் இன்றைய ஆட்டத்தில் எவ்வித அழுத்தமும் இல்லாமல் ஆட முடிந்தது” என்று தெரிவித்தார்.
Advertisement
Win Big, Make Your Cricket Tales Now
கிரிக்கெட்: Tamil Cricket News