
ஐபிஎல் 15ஆவது சீசன் தொடர் வரும் மார்ச் 26ஆம் தேதி தொடங்கவுள்ளது. இன்னும் ஒரு வார காலமே இருப்பதால் அணிகள் தீவிரமாக தயாராகி வருகின்றன. இந்த முறை கோப்பையை வெல்ல ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மீது தான் அதிக எதிர்பார்ப்புகள் உள்ளன.
கடந்த சீசனுடன் விராட் கோலி கேப்டன் பதவியில் இருந்து விலகினார். இதனையடுத்து அந்த அணியின் புதிய கேப்டனாக தென் ஆப்பிரிக்க வீரர் டூ பிளெசிஸ் நியமிக்கப்பட்டுள்ளார். டாப் ஆர்டரில் விராட் கோலி, மேக்ஸ்வெல், டூப்ளசிஸ் என அட்டகாச வீரர்கள் இருப்பதால் அந்த அணிக்கு பேட்டிங் அதிரடியாக உள்ளது.
இந்நிலையில் இதில் விராட் கோலி தான் இந்த முறை டேஞ்சர் வீரர் என மேக்ஸ்வெல் கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “கேப்டன்சி தான் கோலிக்கு பெரிய பொறுப்பாக இருந்தது. தற்போது அது இல்லை என்பதால் கோலியுடைய ஆக்ரோஷத்தை இனி முழுமையாக பார்க்கலாம். எதிரணிகள் அவரின் பேட்டிங்கை பார்த்து பயப்பட வேண்டிய சூழல் வரும்.