
18ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் நேற்று முல்லன்பூரில் நடைபெற்ற எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸை வீழ்த்து இரண்டாவது குவாலிஃபையர் ஆட்டத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளது.
அதிலும் இப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய ஜானி பேர்ஸ்டோவ் தனது முதல் போட்டியிலேயே 22 பந்துகளில் 4 பவுண்டரி, 3 சிக்ஸர்களை விளாசி அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்திருந்தார். இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி நடப்பு ஐபிஎல் தொடரில் பவர்பிளே ஓவர்களில் தங்களுடைய அதிகபட்ச ரன்களையும் பதிவுசெய்து அசத்தியதுடன், அணிக்கு தேவையான அடித்தளமாகவும் இது அமைந்தது.
இந்நிலையில் இப்போட்டி குறித்து பேசிய ஜானி பேர்ஸ்டோவ், "ரோஹித் சர்மாவிடம் நான் சொல்ல வேண்டிய விஷயங்கள் ஏதும் இல்லை என்று நினைக்கிறேன். அவர் இப்போது 7,000 ஐபிஎல் ரன்களை எட்டியுள்ளார். மேலும் உலகம் முழுவதும் பல்வேறு பந்து வீச்சாளர்களுக்கு எதிராக அவருக்கு ஏராளமான அனுபவம் உள்ளது, இதுவரை விளையாடிய பந்து வீச்சாளர்களில் அவர் சிறந்தவர். அவருடன் இணைந்து தொடக்க வீரராக விளையாடியது மகிழ்ச்சியளிக்கிறது.