Advertisement
Advertisement
Advertisement

இந்திய அணியின் பந்துவீச்சு குறித்து விளாசும் கபில் தேவ்!

இந்திய இளம் பவுலர்கள் திறன் குறித்து முன்னாள் கேப்டனும், ஆல் ரவுண்டருமான கபில் தேவ் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan July 02, 2021 • 11:10 AM
It Saddens Me To See Bowlers Getting Tired After 4 Overs: Kapil Dev
It Saddens Me To See Bowlers Getting Tired After 4 Overs: Kapil Dev (Image Source: Google)
Advertisement

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி தோற்றதற்கு பல காரணங்கள் உள்ளன. அவற்றில் முக்கியமானது அணியில் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் இல்லாதது. ஏனெனில் இந்திய அணி அந்த இடத்தில் தான் பெரியளவில் சறுக்கியது. அதுவே இறுதிப் போட்டியை இழப்பதற்கும் முக்கிய காரணமாக அமைந்தது.

இந்திய அணியின் மிக முக்கியமான வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா தான். ஆனால், முதுகு வலியால் அவதிப்பட்டு வரும் பாண்டியா, தீவிர சிகிச்சை எடுத்து அதிலிருந்து மீண்டு வந்து கிரிக்கெட் விளையாடி வருகிறார். ஆனாலும், அவர் பேட்டிங் தான் செய்கிறாரே ஒழிய, பவுலிங் செய்யவில்லை. 

Trending


அதேசமயம், பாண்டியாவுக்கு மாற்று ஆல் ரவுண்டாக கருதப்பட்ட ஷர்துல் தாகூர் மீதும் கோலி பெரியளவில் நம்பிக்கை வைக்கவில்லை. இதனால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் அவர் தேர்வு செய்யப்படவில்லை. ஒருவேளை இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவருக்கு வாய்ப்பளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இந்திய வேகப்பந்து வீச்சாளர்களின் திறன் குறித்து முன்னாள் கேப்டன் கபில் தேவ் வேதனையுடன் விமர்சித்திருக்கிறார். 

இதுகுறித்து பேசிய கபில் தேவ், "நான் நினைப்பது என்னவென்றால், நீங்கள் ஒரு வருடத்தில் 10 மாதம் கிரிக்கெட் விளையாடும்போது, நீங்கள் அதிக காயங்களுக்கு ஆளாக நேரிடும். இன்றைய கிரிக்கெட் மிகவும் அடிப்படை நிலையிலேயே உள்ளது. பேட்டிங் அல்லது பவுலிங் மட்டும் செய்து ஒப்பேற்றிவிடலாம். 

ஆனால், எங்கள் காலத்தில், நாங்கள் எல்லாவற்றையும் செய்ய வேண்டியிருந்தது. இன்று கிரிக்கெட் மாறிவிட்டது. சில நேரங்களில் ஒரு வீரர் நான்கு ஓவர்கள் வீசிய பிறகு சோர்வடைவதைப் பார்ப்பது வருத்தமளிக்கிறது. மேலும் அவர்களை மூன்று அல்லது நான்குக்கு மேல் பந்து வீச அனுமதிக்கப்படவில்லை என்று கேள்விப்பட்டேன். இப்படி இருந்தால் என்ன செய்வது?

எனக்கு நினைவிருக்கிறது, எங்கள் காலத்தில் கடைசியாக வந்து வலைப்பயிற்சியில் பேட்டிங் செய்யும் வீரர்களுக்கும் 10 ஓவர்கள் வீசுவோம். அந்த மனநிலையை அவர்களது உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க அறிவுறுத்தியது. இன்றைய தலைமுறையினர் நான்கு ஓவர்கள் வீசிவிட்டு சோர்வடைவதை பார்க்கும் போது, எங்களுக்கு விசித்திரமாக உள்ளது" என்று தெரிவித்துள்ளார். 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement