
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரானது சமீபத்தில் இங்கிலாந்தில் நடைபெற்று முடிந்தது. இந்த தொடரில் முதல் 4 போட்டிகள் முடிவடைந்த நிலையில் இந்திய அணி 2 -1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்க 5வது டெஸ்ட் போட்டியானது கரோனா அச்சம் காரணமாக ரத்து செய்யப்பட்டது.
இதன் காரணமாக இத்தொடரின் வெற்றியாளர் குறித்து பிரச்சினைகள் எழுந்தன. இந்நிலையில் இந்த தொடரின் போது இந்திய அணி வீரர் ஒருவரை இங்கிலாந்து வீரர்கள் மிகவும் மோசமான வார்த்தைகளில் வசைபாடியதாக இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஷர்துல் தாகூர் தனது கருத்தினைத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய ஷர்துல் தாக்கூர், “லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியின்போது ஆண்டர்சனை கடுமையான பந்துவீச்சின் மூலம் தாக்க வேண்டும். ஆனால் அதன் பிறகு அந்த தாக்கம் ஓவல் மைதானம் வரை தொடர்ந்தது. பின்பு நான் ஆண்டர்சனிடம் சென்று உங்கள் வீரர்கள் பும்ராவை ஆபாசமான வார்த்தைகளால் பேசினர்.