Advertisement

ஃபார்முக்குத் திரும்பும் தருணத்தைத் தேடிக் கொண்டிருந்தேன் - ஜோஸ் பட்லர்!

மோசமான ஃபார்மிலிருந்து மீண்டும் சிறப்பாக விளையாடுவதற்கான நேரம் வந்துவிட்டதாக இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan December 07, 2023 • 17:28 PM
ஃபார்முக்குத் திரும்பும் தருணத்தைத் தேடிக் கொண்டிருந்தேன் - ஜோஸ்  பட்லர்!
ஃபார்முக்குத் திரும்பும் தருணத்தைத் தேடிக் கொண்டிருந்தேன் - ஜோஸ் பட்லர்! (Image Source: Google)
Advertisement

கடந்த சில மாதங்களாக இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் ஒருநாள் போட்டிகளில் பெரிதாக ரன்கள் குவிக்கவில்லை. இந்தியாவில் நடைபெற்ற உலகக் கோப்பைத் தொடரும் அவருக்கு சிறப்பானதாக அமையவில்லை. தற்போது இங்கிலாந்து அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.

இதில் இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்ற நிலையில், நேற்று நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தியது.

Trending


இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் 45 பந்துகளில் 58 ரன்கள் எடுத்து வெற்றிக்கு உதவினார். இந்த நிலையில், மோசமான ஃபார்மிலிருந்து மீண்டும் சிறப்பாக விளையாடுவதற்கான நேரம் வந்துவிட்டதாக இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், “நான் மீண்டும் சிறப்பான ஃபார்முக்குத் திரும்பும் தருணத்தைத் தேடிக் கொண்டிருந்தேன். சில நேரங்களில்  எனக்கான தருணம் அமைந்தபோதிலும், அதை என்னால் சிறப்பாக பயன்படுத்திக் கொள்ள முடியாமல் இருந்தது எனக்கு ஏமாற்றமளித்தது. எனது மோசமான ஃபார்மின் காரணமாக நான் நொந்து போயிருந்தேன்.

அதிலிருந்து மீண்டு சிறப்பாக விளையாடுவதற்கான நேரம் வந்துவிட்டது. நேற்று நான் சிறப்பாக விளையாடியது எனக்கு மகிழ்ச்சியளித்தது. நீண்ட நாள்கள் கழித்து எனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளேன்” என்று தெரிவித்துள்ளார். 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement