
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியானது முதலில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இழந்த நிலையில் அடுத்ததாக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. இந்த தொடரின் முதல் ஆட்டத்தில் பிரமாதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றியை ருசித்த தென் ஆப்பிரிக்க அணியானது அடுத்தடுத்து இரண்டு தோல்விகளை பெற்று தற்போது ஒருநாள் தொடரையும் 2-1 என்ற கணக்கில் தொடரை இழந்தது.
அதன்படி நேற்று டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்ற மூன்றாவது போட்டியில் முதலில் விளையாடிய தென் ஆப்பிரிக்க அணியானது இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 27.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 99 ரன்களை மட்டுமே குவித்தது.
பின்னர் 100 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கினை எதிர்த்து விளையாடிய இந்திய அணியானது 19.1 ஓவரிலேயே மூன்று விக்கெட்டை இழந்து 105 ரன்கள் குவித்து ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் எளிதாக வெற்றி பெற்றிருந்தது.