Advertisement
Advertisement
Advertisement

கடைசி ஒருநாள் போட்டியிலாவது இவர்களுக்கு வாய்ப்பு கொடுங்க - ராபின் உத்தப்பா!

ஜிம்பாப்வே அணியுடனான கடைசி ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் ராகுல் த்ரிபாட்டி மற்றும் ருத்துராஜ் கெய்வ்காட்டிற்கு இடம் கொடுக்கப்பட வேண்டும் என முன்னாள் இந்திய வீரரான ராபின் உத்தப்பா தெரிவித்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan August 21, 2022 • 14:25 PM
‘It will be unfair if Gaikwad, Tripathi don’t get a game’ – Robin Uthappa
‘It will be unfair if Gaikwad, Tripathi don’t get a game’ – Robin Uthappa (Image Source: Google)
Advertisement

ஜிம்பாப்வே சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, ஜிம்பாப்வே அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றிருந்த நிலையில், இரு அணிகள் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி ஜிம்பாப்வேவின் ஹரேரா மைதானத்தில் நடைபெற்றது. 

இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி ஜிம்பாப்வே அணி வெறும் 161 ரன்களுக்கே ஆல் அவுட்டானது. இதன்பின் 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை துரத்தி களமிறங்கிய இந்திய அணி 25.4 ஓவரிலேயே இலக்கை இலகுவாக எட்டி, 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியும் பெற்றது.

Trending


ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது. இந்தியா ஜிம்பாப்வே இடையேயான கடைசி ஒருநாள் போட்டி 22ஆம் தேதி நடைபெற உள்ளது.

இந்திய அணி தொடரை வென்றுவிட்டதால், கடந்த போட்டிகளில் விளையாடும் வாய்ப்பு கிடைக்காத ருத்துராஜ் கெய்க்வாட், ராகுல் த்ரிபாட்டி போன்ற வீரர்களுக்கு கடைசி போட்டியில் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என முன்னாள் வீரர்கள் பலர் பேசி வருகின்றனர்.

அந்தவகையில், முன்னாள் இந்திய வீரரான ராபின் உத்தப்பாவும், கடைசி ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் ருத்துராஜ் கெய்க்வாட் மற்றும் ராகுல் திரிபாட்டிக்கு வாய்ப்பு கொடுக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய ராபின் உத்தப்பா,“கடைசி போட்டிக்கான இந்திய அணியின் பேட்டிங் ஆர்டரில் பெரிதாக மாற்றங்கள் எதுவும் இருக்காது என்றே நான் கருதுகிறேன். கடைசி போட்டியில் சபாஷ் அஹமதிற்கு வாய்ப்பு கிடைக்கும் என கருதுகிறேன், ருத்துராஜ் கெய்க்வாட் மற்றும் ராகுல் த்ரிபாட்டி ஆகியோரும் தங்களது வாய்ப்புக்காக காத்துள்ளனர். அவர்களுக்கு கொடுக்காவிட்டால் அது அநீதியாக இருக்கும். ஆனால் கடந்த இரண்டு போட்டியிலும் பேட்ஸ்மேன்களுக்கு சரியான வாய்ப்பு கிடைக்காததால் யாரை அணியில் இருந்து நீக்குவது என முடிவு செய்வது கடினமாக இருக்கும்” என்று தெரிவித்தார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement