Advertisement
Advertisement
Advertisement

இறுதி ஆட்டத்திலும் எங்களது திட்டம் செயல்படும் - ஸ்ரேயாஸ் ஐயர்!

ரஸ்ஸலுக்கு முடிந்தவரை பேட்டிங் செய்ய வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பதே நேற்றைய போட்டியில் எங்களது திட்டமாக இருந்தது என்று ஸ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார். 

Bharathi Kannan
By Bharathi Kannan May 15, 2022 • 12:56 PM
"It worked out pretty well, hope it works out well in the final game as well," KKR skipper (Image Source: Google)
Advertisement

ஐபிஎல் போட்டியில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 54 ரன்கள் வித்தியாசத்தில்  கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீழ்த்தியது.

இந்த வெற்றி குறித்து போட்டி நிறைவுக்கு பின்னர் பேட்டியளித்த கொல்கத்தா கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர்,  “தற்போதைய சூழலில் தமது அணி இழப்பதற்கு எதுவும் இல்லை என்ற நிலையில் உள்ளது. இந்த போட்டியில் தமது வீரர்கள் பயமின்றி விளையாடினர். அனைவரும் சரியாக செயல்பட்டனர்.

Trending


எனினும் தமது அணி முழு திறனுடன் இன்னும் விளையாடவில்லை,  அது குறித்து ஆட்டத்திற்கு முன்னர் சக வீரர்களிடம் பேசியனேன். ஆண்ட்ரே ரஸ்ஸல் அதிக ரன் எடுக்க வேண்டும் என்பதால், அவர் பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது சக வீரர் முடிந்தவரை அவருக்கு பேட்டிங் வாய்ப்பை கொடுப்பதே எங்களது திட்டமாக இருந்தது.

கடைசி ஓவரை வாஷிங்டன் சுந்தர் வீச இருப்பதை தெரிந்து அவரை குறி வைத்தோம். அது சிறப்பாக வேலை செய்தது. இறுதி ஆட்டத்திலும் இந்த திட்டம் சிறப்பாக செயல்படும்” என்று நம்பிக்கை தெரிவித்தார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement