Advertisement

சஞ்சு சாம்சனை மட்டும் தனியாக விமர்சிப்பது சரியல்ல - கபில் தேவ்!

சமீப காலங்களில் விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற டாப் வீரர்கள் எத்தனை உள்ளூர் போட்டிகளில் விளையாடினார்கள்? என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் தெரிவித்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan August 16, 2023 • 21:13 PM
சஞ்சு சாம்சனை மட்டும் தனியாக விமர்சிப்பது சரியல்ல - கபில் தேவ்!
சஞ்சு சாம்சனை மட்டும் தனியாக விமர்சிப்பது சரியல்ல - கபில் தேவ்! (Image Source: Google)
Advertisement

நவீன கால கிரிக்கெட்டில் ஜாம்பவான்களாக கொண்டாடப்படும் விராட் கோலி 2019க்குப்பின் ஃபார்மை இழந்து 3 வருடங்கள் தடுமாறியும் ஒரு முறை கூட உள்ளூரில் விளையாடாமல் கடைசி வரை சர்வதேச அளவிலேயே விளையாடி சதங்கள் அடித்து கம்பேக் கொடுத்தார். அதே போல தற்சமயத்தில் தடுமாறும் ரோஹித் சர்மாவும் உள்ளூர் போட்டிகளின் பக்கம் திரும்பாமல் கேப்டனாக இருப்பதால் தொடர்ந்து வாய்ப்பு பெற்று சர்வதேச அளவில் முக்கிய போட்டிகளில் சொதப்பி தோல்விக்கு காரணமாக அமைகிறார்.

மொத்தத்தில் ஃபார்மை இழந்தாலும் இந்தியாவின் போட்டிகள் நடைபெறவில்லை என்றாலும் இந்த 2 நட்சத்திர வீரர்களும் ஓய்வெடுக்கிறார்களே தவிர எப்போதுமே உள்ளூர் கிரிக்கெட்டுக்கு சென்று விளையாடுவதில்லை. இந்நிலையில் விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற வீரர்கள் உள்ளூர் அளவில் விளையாடினால் தான் ஃபார்மையும் மீட்டெடுக்க முடியும் அந்த தொடர்களின் தரமும் உயரும் என்று ஜாம்பவான் கபில் தேவ் கூறியுள்ளார்.

Trending


குறிப்பாக நட்சத்திர வீரர்கள் விளையாடும் போது அதை பார்த்து இளம் வீரர்களும் ஆர்வத்துடன் விளையாடுவார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் உள்ளூர் போட்டிகளில் விளையாடினால் சீனியர்கள் இளம் வீரர்களுக்கு தங்களுடைய அனுபவங்களை பகிர்ந்து அடுத்த தலைமுறையை வளமாக உருவாக்க உதவ முடியும் என்று தெரிவிக்கும் அவர் சமீப காலங்களில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா எத்தனை முறை உள்ளூர் போட்டிகளில் விளையாடினார்கள் என கேள்வி எழுப்பியுள்ளார்.

அத்துடன் வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடரில் தோல்வியை சந்தித்ததற்காக சஞ்சு சாம்சனை மட்டும் விமர்சிப்பதில் அர்த்தமில்லை என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசுகையில், “உள்ளூர் கிரிக்கெட் மிகவும் முக்கியமானதாகும். ஆனால் சமீப காலங்களில் விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற டாப் வீரர்கள் எத்தனை உள்ளூர் போட்டிகளில் விளையாடினார்கள்? இந்த சூழ்நிலையில் டாப் வீரர்கள் குறிப்பிட்ட அளவு உள்ளூர் போட்டிகளில் விளையாட வேண்டும் என்று நான் கருதுகிறேன்.

ஏனெனில் அப்போது தான் அவர்களால் அடுத்த தலைமுறை இளைஞர்களுக்கு உதவ முடியும். மேலும் சஞ்சு சாம்சனை மட்டும் தனியாக விமர்சிப்பது சரியல்ல. காரணம் நாம் ஒட்டுமொத்த இந்திய அணியை பற்றி பேசுகிறோம். இருப்பினும் மிகச் சிறந்த வீரராக அவரிடம் நல்ல திறமையும் இருக்கிறது. அவர் அதை தமக்குத்தாமே சரியாக பயன்படுத்த வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement