Advertisement

மூன்றாவது டெஸ்டில் ஸ்ரேயாஸ், விஹாரிக்கு வாய்ப்பு உண்டா? - ராகுல் டிராவிட் விளக்கம்!

தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர், ஹனுமா விஹாரிக்கு வாய்ப்பு வழங்கப்படுமா என்பது குறித்து பயிற்சியாளர் ராகுல் டிராவிட் விளக்கமளித்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan January 09, 2022 • 12:29 PM
Iyer, Vihari have to wait for regular chances: Dravid
Iyer, Vihari have to wait for regular chances: Dravid (Image Source: Google)
Advertisement

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகள் முடிவடைந்த நிலையில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று தொடரில் சமநிலை வகிக்கின்றன. 

இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 3ஆவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி வருகிற 11ஆம் தேதி கேப்டவுனில் துவங்குகிறது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி இந்த டெஸ்ட் தொடரை கைப்பற்றும் என்பதனால் இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு தற்போது உச்சத்தை தொட்டுள்ளது. 

Trending


இந்நிலையில் இந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் தொடர்ந்து சொதப்பி வரும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களான புஜாரா மற்றும் ரஹானே ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக சிறப்பாக செயல்பட்டு வரும் இளம் வீரர்களான ஸ்ரேயாஸ் அய்யர் மற்றும் விஹாரி ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்பதை ரசிகர்கள் பலரின் கோரிக்கையாக இருந்து வருகிறது.

ஆனால் தற்போது இந்த விவகாரம் குறித்து பேட்டி அளித்துள்ள இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட், “2ஆவது டெஸ்ட் போட்டியில் ஹனுமா விஹாரி மிகச் சிறப்பாக பேட்டிங் செய்தார். அவர் இரண்டு இன்னிங்சிலுமே தனது திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

அதேபோன்று சமீபத்தில் இந்திய அணிக்காக அறிமுகமாகி நியூசிலாந்து தொடரில் சிறப்பாக செயல்பட்ட ஸ்ரேயாஸ் ஐயரும் நல்ல வீரர்தான். ஆனாலும் அணியில் மூத்த வீரர்கள் இருவர் இருக்கும் போது இளம் வீரர்களுக்கு வாய்ப்பு காத்திருக்க வேண்டியது அவசியம். அந்த வகையில் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் விஹாரி ஆகியோர் கிடைக்கும் வாய்ப்புகளில் சரியாக செயல்பட்டு ரன்களை குவிக்க வேண்டும்” என்று  தெரிவித்துள்ளார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement