
வெஸ்ட் இண்டீஸ் தொடரைத் தொடர்ந்து இந்திய அணி அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதற்காக ஜஸ்ப்ரித் பும்ரா தலைமையிலான இந்திய அணி அயர்லாந்துக்கு புறப்பட்டுச் சென்றது. இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி வரும் 18 ஆம் தேதி நடக்கிறது.
இந்த தொடரானது வரும் 2024 ஆம் ஆண்டு நடக்க உள்ள டி20 உலகக் கோப்பை தொடருக்கான ஒரு முன்னோட்டமாக இருக்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது. இந்த நிலையில், ஜஸ்ப்ரித் பும்ரா தலைமையிலான இந்திய அணியின் ஒரு குழு தற்போது அயர்லாந்துக்கு புறப்பட்டுச் சென்றது. இதில், பும்ரா, ரிங்கு சிங், ருதுராஜ் கெய்க்வாட், ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், முகேஷ் குமார், திலக் வர்மா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இந்தியா மற்றும் அயர்லாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டி நாளை தொடங்குகிறது. 2ஆவது போட்டி 20ஆம் தேதியும், 3ஆவது போட்டி 23 ஆம் தேதியும் நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், இந்திய அணிக்கு 11 ஆவது டி20 போட்டி கேப்டனாக ஜஸ்ப்ரித் பும்ரா நாளை மறுநாள் நடக்கும் போட்டியின் மூலமாக அறிமுகமாகவுள்ளார்.