
டி20 உலகக்கோப்பை தொடருக்காக இந்திய அணி வரும் அக்டோபர் 6ஆம் தேதியன்று ஆஸ்திரேலியா புறப்படவுள்ளது. இந்திய அணியின் முன்னணி பவுலரான ஜஸ்பிரித் பும்ரா கடைசி நேரத்தில் டி20 உலகக்கோப்பையில் இருந்து விலகியுள்ளார்.
முதுகுவலி பிரச்சினையால் அவதிப்பட்டு வரும் ஜஸ்பிரித் பும்ராவுக்கு குறைந்தது 4 - 5 மாதங்கள் ஓய்வு தேவை எனக்கூறப்பட்டுள்ளது. எனவே அவரை நம்பி ரிஸ்க் எடுக்க வேண்டாம் என டி20 உலகக்கோப்பை அணியில் இருந்து பிசிசிஐ நீக்கியது. இந்திய அணியின் பவுலிங் சொதப்பலாக இருந்து வரும் சூழலில் பும்ரா விலகியிருப்பது பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் பும்ராவின் விலகலை வைத்து இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய ரசிகர்கள் இணையத்தில் சண்டையிட்டு வருகின்றனர். அதாவது ஜஸ்பிரித் பும்ரா ஐபிஎல் போட்டிகளில் எவ்வித ஓய்வும் இன்றி விளையாடுகிறார். இப்படி பணம் அதிகம் குவியும் தொடர்களில் விளையாடியவிட்டு, தேசத்திற்கான நேரம் வரும் போது சொதப்பியுள்ளார் என ஆஸ்திரேலிய ரசிகர்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.