
இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிகளுக்கு இடையேயான இரண்டவது ஒருநாள் போட்டி வதோதராவில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணி தொடக்க வீராங்கனைகளாக ஸ்மிருதி மந்தனா- பிரதிகா ராவல் இணை களமிறங்கினர். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரை சதம் கடந்ததுடன், முதல் விக்கெட்டுக்கு 110 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்தனர்.
அதன்பின் ஸ்மிருதி மந்தனா 53 ரன்னிலும், பிரதிகா ராவல் 76 ரன்னிலும் என விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ஹர்லீன் தியோல் சர்வதேச மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை பதிவுசெய்ததுடன் 115 ரன்களையும், அவருடன் இணைந்து விளையாடிய ஜெமிமா ரோட்ரிக்ஸ் 52 ரன்களையும் சேர்த்தனர். இதன்மூலம் இந்திய அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 358 ரன்க சேர்த்தது.
இதையடுத்து, கடின இலககி நோக்கி விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் தொடக்க வீராங்கனை மற்றும் கேப்டன் ஹீலி மேத்யூஸ் பொறுப்புடன் ஆடி சதமடித்து அசத்தினார். இப்போட்டியில் அவர் 106 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்த நிலையில், அந்த அணியில் இரண்டாவது அதிகபட்ச ஸ்கோராக ஷமைன் கேம்ப்பெல் 38 ரன்களை சேர்த்தார். ஆனால் அவர்கள் இருவரைத் தவிர்த்து மற்ற வீராங்கனைகள் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தனர்.