Advertisement
Advertisement
Advertisement

இந்த இந்திய வீரரை பார்த்துக் கற்றுக்கொண்டேன் - ஜோஸ் பட்லர்!

ஆஸ்திரேலிய மண்ணில் எப்படி விளையாட வேண்டுமென இந்திய வீரர் ரிஷப் பந்திடமிருந்து கற்றுக்கொண்டேன் என்று இங்கிலாந்து வீரர் ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan November 16, 2021 • 19:31 PM
Jos Buttler Hopes To Emulate Rishabh Pant’s Heroics In Australia
Jos Buttler Hopes To Emulate Rishabh Pant’s Heroics In Australia (Image Source: Google)
Advertisement

சர்வதேச கிரிக்கெட்டில் அதிரடி மன்னனாக விளங்கி வருபவர் இங்கிலாந்து வீரர் ஜாஸ் பட்லர். நடந்து முடிந்த டி-20 உலகக் கோப்பை தொடரில் கடினமான ஆடுகளத்தில் களமிறங்கி சதம் விளாசினார். 

தற்போது ஜாஸ் பட்லர் பாரம்பரியமிக்க ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து அணியில் இடம்பிடித்துள்ளார். இந்த நிலையில் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு ஜாஸ் பட்லர் தனது கருத்துக்களை எழுதி இருந்தார்.

Trending


அதில் “டி20 உலகக் கோப்பையை இங்கிலாந்து அணி வெல்லும் என்று நம்பினேன். ஆனால் தற்போது அரையிறுதியில் வெளியேறியது மிகுந்த மன வேதனையை தந்தது. தற்போது கிரிக்கெட்டை பற்றி நினைக்காமல் துபாயில் விடுமுறையை கழித்து வருகிறேன்.

தற்போது இங்கிலாந்துக்கு காத்திருக்கும் மற்றொரு சவால் பாரம்பரியமிக்க ஆஷஸ் தொடரை ஆஸ்திரேலிய மண்ணில் கைப்பற்ற வேண்டும். ஆஸ்திரேலிய மண்ணில் இம்முறை நன்றாக விளையாடுவேன். 

Also Read: T20 World Cup 2021

அதிலும் இந்திய வீரர் ரிஷப் பண்டை பார்த்து நிறைய பாடம் கற்றுள்ளேன். ஏனெனில் அவர் ஆஸ்திரேலிய மண்ணில் முதலில் பொறுமையாக விளையாடிய பின்னரே அதிரடியாக விளையாடி ரன்குவிப்பார். அதே முறையைப் பின்பற்றினால் ஆஸ்திரேலிய மண்ணில் நானும் சிறப்பாக விளையாடுவேன் என்று நம்புகிறேன்” என தெரிவித்துள்ளார். 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement