
Jos Buttler Rules Himself Out Of Remainder Of IPL 2021 (Image Source: Google)
நடப்பாண்டு ஏப்ரல் மாதம் ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் பயோ பபுள் பாதுகாப்புடன் இந்தியாவில் நடைபெற்று வந்தது. இதற்கிடையில் வீரர்களுக்கு தொற்று பரவியதன் காரணமாக 29 போட்டிகள் மட்டுமே நடைபெற்ற நிலையில், ஐபிஎல் தொடர் ஒத்திவைக்கப்பட்டது.
இதையடுத்து எஞ்சியுள்ள 31 போட்டிகளையும் செப்டம்பர் - அக்டோபர் மாதங்களில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்படும் என பிசிசிஐ சில நாள்களுக்கு முன் அறிவித்தது. இதையடுத்து அதற்கான வேலைகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் டி20 உலகக்கோப்பை தொடரும் நெருங்குவதால், சில வெளிநாட்டு வீரர்கள் இத்தொடரில் பங்கேற்பார்களா என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஏனெனில் இங்கிலாந்து, வங்கதேசம் உள்ளிட்ட நாடுகள் தங்கள் நாட்டு வீரர்களை ஐபிஎல் தொடரில் விளையாட அனுமதிக்கப்போவதில்லை என்று தெரிவித்துள்ளன.