Advertisement

ஆஷஸ் தொடர்: ஐந்தாவது போட்டியிலிருந்து விலகி நாடு திரும்பிய பட்லர்!

காயம் காரணமாக இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் ஜோஸ் பட்லர் ஆஷஸ் டெஸ்ட் தொடரிலிருந்து விலகி நாடு திரும்புகிறார்.

Bharathi Kannan
By Bharathi Kannan January 10, 2022 • 12:34 PM
Jos Buttler to return home with broken finger
Jos Buttler to return home with broken finger (Image Source: Google)
Advertisement

ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து அணி தற்போது ஆஸ்திரேலியா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த போட்டியின் முதல் 4 ஆட்டங்கள் முடிவடைந்துள்ள நிலையில் 3 - 0 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி ஏற்கனவே தொடரை கைப்பற்றி விட்டது. 

நடைபெற்று முடிந்த நான்காவது டெஸ்ட் போட்டியில் வெற்றியின் விளிம்பு வரை சென்ற ஆஸ்திரேலிய அணியானது இறுதியில் ஒரு விக்கெட்டை வீழ்த்த முடியாமல் தங்களது 4ஆவது வெற்றியை நூலிழையில் தவறவிட்டது.

Trending


இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 5ஆவது போட்டி இன்னும் சில தினங்களில் ஹாபர்ட்டில் நடைபெற உள்ளது. இந்த போட்டியிலும் ஆஸ்திரேலிய அணியே வெற்றி பெறும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் அந்த அளவிற்கு தற்போது இங்கிலாந்து அணியின் ஆட்டம் மோசமாக இருந்து வருகிறது. 

இந்நிலையில் அந்த அணியின் வலிமையை மேலும் பாதிக்கும் விசயமாக தற்போது முன்னணி விக்கெட் கீப்பர் காயம் காரணமாக இந்த 5ஆவது போட்டியில் விளையாட மாட்டார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி நடைபெற்று முடிந்த நான்காவது டெஸ்ட் போட்டியின் 2ஆவது இன்னிங்சில் தோல்வியை தவிர்க்க போராடிய ஜோஸ் பட்லர் தனது விரலில் அடிவாங்கி காயமடைந்தார். போட்டி முடிந்த பின்னர் அவரது காயத்தின் தன்மை குறித்து எடுக்கப்பட்ட ரிப்போர்ட்டில் அவர் தொடர்ந்து 5ஆவது போட்டியில் விளையாட முடியாது என்றும், இதனால் அவர் தொடரிலிருந்து விலகி நாடு திரும்புகிறார் என்றும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்தது.

இது குறித்து பேசிய இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட், “ஜாஸ் பட்லர் எங்களது அணியின் மிக முக்கியமான வீரர். அவர் இல்லாதது எங்கள் அணிக்கு நிச்சயம் பின்னடைவு தான். ஆனாலும் அவருக்கு பதிலாக விளையாடும் மாற்று வீரர்கள் அணியில் எங்களிடம் உள்ளனர். தொடர்ந்து நாங்கள் தோல்வியைத் தழுவிய வருவதால் எங்களிடம் போதிய பிளான் மற்றும் நோக்கம் இல்லை என நினைத்துவிட வேண்டாம்.

நிச்சயம் எங்கள் அணிக்கு எதிர்வரும் 5ஆவது டெஸ்ட் போட்டி சிறப்பாக அமையும் என்றும் மீண்டும் நாங்கள் வெற்றி பாதைக்கு திரும்ப அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம்” என தெரிவித்துள்ளார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement