
ஐபில் தொடரின் 16ஆவது சீசனுக்கான விரர்கள் மினி ஏலமானது கொச்சியில் உள்ள பிரபல தனியார் நட்சத்திர விடுதியில் நேற்று நடைபெற்று வருகிறது. இந்த மினி ஏலத்திற்கான இறுதிக் கட்ட வீரர்கள் பட்டியலில் 405 பேர் உள்ளனர். அதில் 273 இந்திய வீரர்களும், 132 வெளிநாட்டு வீரர்களும் உள்ளனர். இவர்களில் இருந்து அதிகபட்சமாக 30 வெளிநாட்டவர் உள்பட சுமார் 80 வீரர்கள் ஏலத்தில் தேர்வு செய்யப்பட்டனர்.
இந்த ஏலத்தில் சாம் கரண், கேமரூன் கிரீன், பென் ஸ்டோக்ஸ், நிக்கோலஸ் பூரண், ஹாரி ப்ரூக் ஆகியோர் சிறந்த ஃபார்மில் இருப்பதால், அனைத்து அணிகளும் போட்டியிட்டு பெரும் தொகைக்கு வாங்கின. இந்திய வீரர்களில் மயங்க் அகர்வால், ஷிவம் மாவி மற்றும் முகேஷ் குமார் உள்ளிட்ட வீரர்களும் நல்ல தொகைக்கு வாங்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே அயர்லாந்து அணியைச் சேர்ந்த இளம் வீரர் ஜோஷுவா லிட்டில் ஐபிஎல் ஏலத்தில் பெரிய தொகைக்கு வாங்கப்படுவார் என்று சுரேஷ் ரெய்னா உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்கள் கணித்திருந்தனர். இவர் ஏற்கனவே சென்னை அணியின் நெட் பந்துவீச்சாளராக இருந்ததால், சென்னை அணியிலும் வாய்ப்பு கிடைக்கும் என்று பார்க்கப்பட்டது.