-mdl.jpg)
இங்கிலாந்து அணியின் முன்னணி ஆல்ரவுண்டரான பென் ஸ்டோக்ஸ் திடீரென ஓய்வு அறிவிப்பை வெளியிட்டிருந்தார். சமீபத்தில் டெஸ்ட் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட அவர், திடீரென ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
தற்போது 31 வயதே ஆகும் பென் ஸ்டோக்ஸ் ஓய்வு பெறுவதற்கு கூறிய காரணம் தான் பரபரப்பை கிளப்பியது. அதாவது டி20, 50 ஓவர் கிரிக்கெட், டெஸ்ட் என தொடர்ச்சியாக போட்டிகள் அடுக்கப்படுவதாகவும், பனிச்சுமை அதிகமானதால் வெளியேறுவதாக கூறியிருந்தார். இதன்மூலம் வருமானத்திற்காக போட்டிகளை கணக்கின்றி ஐசிசி நடத்துவதாக விமர்சனங்கள் எழுந்தன.
இந்நிலையில் இதுகுறித்து முன்னாள் வீரர் நாசர் ஹுசைன் முக்கிய கருத்தை பதிவு செய்துள்ளார். அதில், “பென் ஸ்டோக்ஸ் தனது 80% ஆட்டத்தை கொடுத்திருந்தால் கூட போதும் தான். ஆனால் அவர் அப்படி விளையாடினால், மற்ற வடிவ கிரிக்கெட்டிலும் அவரின் ஃபார்ம் குறைந்து அவதிப்படுவார். அதில் இருந்து தப்பிக்க தான் இந்த முடிவை எடுத்துவிட்டார்.