
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று முடிந்த டி20 உலக கோப்பை தொடரின் அரையிறுதி போட்டியோடு வெளியேறிய இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் தற்போது அடுத்ததாக மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கின்றன. இவ்விரு அணிகளுக்கும் இடையான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது நாளை தொடங்கவுள்ளது.
இந்த தொடருக்கான இந்திய அணியில் ரோஹித் சர்மா, விராட் கோலி, பும்ரா, ஜடேஜா போன்ற வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஹார்டிக் பாண்டியா தலைமையிலான இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணியானது இந்த தொடரில் பங்கேற்க உள்ளது.
இந்நிலையில் இந்த டி20 தொடர் குறித்து பேட்டி அளித்துள்ள நியூஸிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் இந்திய அணிக்கு எதிரான இந்த தொடர் குறித்து கூறுகையில், “இந்திய அணியில் ஏராளமான சூப்பர் ஸ்டார்கள் இடம் பெற்றுள்ளனர். சீனியர் வீரர்கள் இந்த தொடரில் இடம் பெறவில்லை என்றாலும் அவர்களை அணியில் இருக்கும் இளம் வீரர்கள் அனைவருமே உண்மையான சூப்பர் ஸ்டார்கள் தான்.