
நடந்து முடிந்த விஜய் ஹசாரே கோப்பை 2024-25 தொடரில் தனது அற்புதமான ஆட்டத்தின் மூலம் விதர்பா அணியின் கேப்டன் கருண் நாயர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார், ஆனாலும் அவரால் தேர்வாளர்களின் கவனத்தை ஈர்க்க முடியவில்லை. இத்தொடரில் சிறந்த ஃபார்மில் இருந்த கருண் நாயர், எட்டு இன்னிங்ஸ்களில் 389.50 என்ற சராசரியில் 779 ரன்களை எடுத்து அதிக ரன்கள் எடுத்த வீரராக உள்ளார். இதில் அவர் ஐந்து சதங்களையும் ஒரு அரை சதத்தையும் பதிவுசெய்தார்.
இதனால் எதிர்வரும் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியின் தேர்விலும் கருண் நாயர் இடம்பிடிப்பார் என எதிர்பார்க்கப்படது. ஆனால் அவர் அபாரமாக செயல்பட்ட நிலையிலும், அவர் அணியில் தேர்ந்தெடுக்கப்படவில்லை. இந்நிலையில் ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான அணியில் தேர்வு செய்யப்படாதது குறித்து கவலையில் இல்லை என்றும், ஆனால் இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட் விளையாட விருப்பமுடன் உள்ளதாகவும் கருண் நாயர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “நான் நேர்மையாகச் சொல்ல வேண்டுமெனில் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு தேர்வு செய்யப்படாதது பற்றி அதிகம் யோசிக்கவில்லை. ஏனெனில் அந்த வாய்ப்பு எனக்கு மிகவும் தொலைவில் இருந்தது. ஆனால் நான் முன்பு சொன்னது போல், உங்களுக்கு கனவுகள் உள்ளன, உங்களுக்கு எண்ணங்கள் உள்ளன, நீங்கள் விஷயங்களை அடைய விரும்புகிறீர்கள்.