Advertisement

ஒரே ஆட்டத்தில் அனைவரையும் கவர்ந்த வெங்கடேஷ் ஐயர்!

பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில், ரசிகர்களின் கவனத்தை வருண் சக்கரவர்த்திக்கு பிறகு ஈர்த்தவர் வெங்கடேஷ் ஐயர் தான்.

Bharathi Kannan
By Bharathi Kannan September 21, 2021 • 13:04 PM
'Keep An Eye On Him': Venkatesh Iyer Impresses Cricketer Fraternity
'Keep An Eye On Him': Venkatesh Iyer Impresses Cricketer Fraternity (Image Source: Google)
Advertisement

ஆறடிக்கும் மேல் உயரமுள்ள வெங்கடேஷ் ஐயர், கொல்கத்தா அணியின் தொடக்க வீரராக களமிறங்கி, ஆர்சிபி பவுலர்கள் அனைவரையும் ஓடவிட்டார். கேகேஆர் நிர்வாகமே இவர் இந்தளவு சிறப்பாக விளையாடுவார் என்று எதிர்பார்த்திருக்காது போல. அந்தளவு நேற்று அனைவரையும் கவர்ந்துவிட்டார்.

குறிப்பாக, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில், இந்திய அணியின் அனைத்து பேட்ஸ்மேன்களையும் அச்சுறுத்திய கைல் ஜேமிசன் ஓவரை, நேற்று வெங்கடேஷ் டீல் செய்தது வியக்க வைத்தது. கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்த வெங்கடேஷ் 27 பந்துகளில் 41 ரன்கள் விளாசினார். இதில், 7 பவுண்டரிகளும், 1 சிக்ஸரும் அடங்கும். அவர் சிக்ஸ் அடித்தது கைல் ஜேமிசன் ஓவரில். அதுவும், 90 மீட்டர் சிக்ஸ் அது. 

Trending


நேற்று தான் ஐபிஎல் கிரிக்கெட்டில் தனது முதல் போட்டியில் அவர் விளையாடினார். ஆனால், கண்களிலும் துளி பயம் இல்லை. ஏதோ, 10 வருடங்களாக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடிக் கொண்டிருக்கும் ஒரு தேர்ந்த கிரிக்கெட்டரைப் போல பந்துகளை க்ளீயர் செய்தார் வெங்கடேஷ். இதன் மூலம் கொல்கத்தா அணியின் சிறந்த கண்டுபிடிப்புகளில் ஒருவராக வெங்கடேஷ் உருவடுத்துள்ளார்.

இதில் ஆச்சர்யம் என்னவெனில், "கிரிக்கெட் தான் என் உயிர் மூச்சு" என்ற எண்ணமே இல்லாதவர் வெங்கடேஷ். அவருக்கு தெரிந்ததெல்லாம் படிப்பு மட்டும் தான். பள்ளிக் காலத்தில் இருந்தே படிப்பில் கில்லியாக விளங்கியவர் இவர். எந்நேரமும், தனது அறையில் புத்தகமும், கையுமாக இருந்தவரை, அவரது அம்மா தான் கையில் பேட்டை கொடுத்து, போய் வேர்க்க விறுவிறுக்க கிரிக்கெட் விளையாடு வலுக்கட்டாயமாக அவரை கிரிக்கெட்டில் சேர்த்து, இன்று ஐபிஎல் வரை கொண்டு வந்திருக்கிறார்.

சிஏ படித்த 2016 இல் இடைநிலைத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றார், அப்போது அவர் ஒரு முடிவை எடுத்தார். அதாவது, சிஏ இறுதிப் போட்டிக்கு முயற்சிப்பதால் விளையாட்டை கைவிடுவது அல்லது குறைந்தபட்சம் தற்காலிகமாக தனது கிரிக்கெட் வாழ்க்கையை நிறுத்தி வைப்பது என்று முடிவெடுத்தார். ஏனெனில், மத்தியப் பிரதேச அணிக்காக அவர் ஏற்கனவே டி 20 மற்றும் 50 ஓவர்கள் போட்டிகளில் விளையாடி வந்தார். தவிர மாநிலத்தின் 23 வயதுக்குட்பட்ட அணியின் கேப்டனாகவும் இருந்தார்.

இதுகுறித்து வெங்கடேஷ் கூறுகையில், "நான் சிஏவை விட்டுவிட்டு எம்பிஏ நிதியியல் படிக்க முடிவு செய்தேன். நான் நிறைய நுழைவுத் தேர்வுகள் எழுதினேன். நல்ல மதிப்பெண்கள் பெற்றேன், ஒரு நல்ல கல்லூரியில் சேர்ந்தேன். எனினும், நான் கிரிக்கெட்டும் விளையாடினேன். இதனால், என் மீது நம்பிக்கை வைத்து அனைவரும் என்னை கிரிக்கெட் பாதையில் திசைத்திருப்பினார்கள். 

உண்மையாக சொல்ல வேண்டுமெனில், நான் எப்போதும் ஒரு பிரகாசமான மாணவனாக இருந்தேன். நான் கிரிக்கெட் விளையாட வராமல் இருந்திருந்தால், நான் ஒரு ஐஐடி (இந்திய தொழில்நுட்ப நிறுவனம்) அல்லது ஐஐஎம் (இந்திய மேலாண்மை நிறுவனம்) ஆகியவற்றில் சேர்ந்திருப்பேன்.

Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021

நான் எப்போதும் தனி வழியில் செல்பவன். இது ஒரு அற்புதமான பயணம், இன்னும் பல கற்றல் மற்றும் நல்ல அனுபவங்களுடன் மென்மேலும் வளர விரும்புகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement