
KL Rahul Smashes Ton As Mumbai Indians Lose Another (Image Source: Google)
ஐபிஎல் 15ஆவது சீசனின் இன்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸூம் ஆடிவருகின்றன. மும்பை வான்கடேவில் நடந்துவரும் இந்த போட்டியில், முதல் வெற்றியை பெறும் முனைப்பில் களமிறங்கியுள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி. டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மா ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.
முதலில் பேட்டிங் ஆடிய லக்னோ அணியில் ஒருமுனையில் கேஎல் ராகுல் நிலைத்து நின்று அடித்து ஆடிய நிலையில், மறுமுனையில் டி காக்(10), மனீஷ் பாண்டே(22), மார்கஸ் ஸ்டோய்னிஸ்(0) ஆகியோர் ஏமாற்றமளித்தனர்.
ராகுல் அடித்து ஆடினாலும், மறுமுனையில் மற்ற வீரர்களை அடிக்கவிடாமல் இழுத்துப்பிடித்து ஸ்கோரை கட்டுப்படுத்தினர் மும்பை பவுலர்கள். க்ருணல் பாண்டியா(1), தீபக் ஹூடா(10), ஆயுஷ் பதோனி(14) ஆகியோரும் ஆட்டமிழந்தனர்.