
Kris Srikanth on remembering India's 1st World Cup victory (Image Source: Twitter)
கடந்த 1983ஆம் ஆண்டு ஜூன் 25ஆம் நாளை இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் மறக்க முடியாது. கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்த நாள் இது.
அந்த இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் அப்போதைய ஜாம்பவானாக திகழ்ந்த வெஸ்ட் இண்டீஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் இந்தியா அணி முதலில் பேட்டிங் செய்து 54.4 ஓவர்களில் 183 ரன்களை எடுத்தது.
இந்திய அணி சார்பில் கிரிஸ் ஸ்ரீகாந்த் 38 ரன்களும் அமர்நாத் 26 ரன்களும், சந்தூப் பாடில் 27 ரன்களும் கபில் தேவ் 15 ரன்களும் எடுத்தனர். அப்போதெல்லாம் ஒருநாள் போட்டி 60 ஓவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 52 ஓவரில் 140க்கு ஆட்டமிழந்தது. இந்திய அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது.