
IND vs UAE, Asia Cup: ஐக்கிய அரபு அமீரக அணிக்கு எதிரான லீக் போட்டியில் இந்திய வீரர்கள் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளையும், சிவம் தூபே 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அணியின் வெற்றிக்கு உதவினர்.
டி20 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது ஐக்கிய அரபு அமீரகத்தில் கோலாகலமாக தொடங்கியுள்ளது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்றுள்ள இந்த தொடரில், குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் அணிகளும், குரூப் பி பிரிவில் ஆஃப்கானிஸ்தான், இலங்கை, வங்கதேசம் மற்றும் ஹாங்காங் அணிகளும் இடம்பிடித்துள்ளன. இதனால் இத்தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
அதன்படி நேற்று நடைபெற்ற, தொடரின் இரண்டாவது லீக் போட்டியில் குரூப் பி பிரிவில் இடம் பிடித்துள்ள இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீர அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. துபாயில் உள்ள துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸை வென்ற இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் முதலில் பந்துவீசுவதாக அறிவித்து ஐக்கிய அரபு அமீரக அணியை பேட்டிங் செய்ய அழைத்தார்.