Advertisement

ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் கைல் ஜேமிசன்; பின்னடவை சந்திக்கும் சிஎஸ்கே!

காயம் காரணமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளவுள்ள நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் கைல் ஜேமிசன் வரவுள்ள ஐபிஎல் தொடரிலிருந்து முழுவதுமாக விலகியுள்ளார். 

Bharathi Kannan
By Bharathi Kannan February 20, 2023 • 19:01 PM
Kyle Jamieson To Undergo Back Surgery; Likely To Miss IPL 2023
Kyle Jamieson To Undergo Back Surgery; Likely To Miss IPL 2023 (Image Source: Google)
Advertisement

ஐபிஎல் 16ஆவது சீசனுக்கான அட்டவணை சமீபத்தில் வெளியானது. அதன்படி இத்தொடர் மார்ச் 31ஆம் தேதி துவங்கி மே 28ஆம் தேதி முடிய உள்ளது. துவக்க போட்டியும், இறுதிப்போட்டியும் அகமதாபாத் மைதானத்தில் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா காரணமாக கடந்த இரண்டு சீசன்களில் அணிகள், தங்களது மைதானங்களில் விளையாட முடியாத நிலை இருந்தது. இந்நிலையில், இந்தாண்டில் அனைத்து அணிகளும் தங்களது சோந்த மைதானங்களில் விளையாடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது சிஎஸ்கே ரசிகர்களுக்கு கூடுதல் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது.

Trending


கேப்டன் மகேந்திர சிங் தோனி தனது கடைசிப் போட்டியை சென்னை சேப்பாக்கத்தில் விளையாடுவேன் எனக் கூறியிருந்தார். அதன்படி இந்தாண்டு கோப்பையை வென்றுகொடுத்துவிட்டு, சென்னையில் ஓய்வு அறிவிப்பை வெளியிடுவார் என ரசிகர்கள் நம்பிக்கையுடன் இருக்கிறார்கள். இதற்காக, சிஎஸ்கே வீரர்களும் அடுத்த மாதத்தில் இருந்து பயிற்சி முகாமை தொடங்க உள்ளனர்.

இந்நிலையில், சிஎஸ்கேவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் வகையில் ஒரு செய்தி வெளியாகியுள்ளது. ஆம், சிஎஸ்கேவின் வேகப்பந்து வீச்சாளர், நியூசிலாந்து வீரர் கைல் ஜேமிசன் ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசனில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். ஜேமிசனுக்கு கடந்த சில மாதங்களாகவே முதுகு வலி பிரச்சினை இருந்து வருகிறது. அதற்காக அவர் தற்போது அறுவை சிகிச்சை செய்ய உள்ளார். இந்த அறுவை சிகிச்சைக்கு பிறகு 4 மாதங்கள் வரை ஓய்வில் இருக்க வேண்டிய நிலை இருக்கிறது.

இதனால்தான், ஜேமிசன் ஐபிஎல் 16ஆவது சீசனில் இருந்து விலகியுள்ளார். ஏற்கனவே, கடந்த ஆண்டில் தீபக் சஹார் விலகியதால், சிஎஸ்கே கடும் பின்னடைவை சந்தித்திருந்தது. தற்போது, தீபக் சஹார் சரியான பார்மில் இருக்கிறாரா என்றே தெரியவில்லை.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில், பந்துவீச்சாளர்கள் அதிகம் தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பதால்தான், ஜேமிசனை சிஎஸ்கே வாங்கியது. இந்நிலையில், அவர் விலகியிருப்பதும், தீபக் சஹார் சரியான ஃபார்மில் இருக்கிறாரா என்பது தெரியவில்லை என்பதாலும், இந்த விஷயம் சிஎஸ்கேவுக்கு நிச்சயம் பின்னடைவான விஷயம்தான்.

கைல் ஜேமிசனுக்கு மாற்றாக வெளிநாட்டு பந்துவீச்சாளரை வாங்க சிஎஸ்கேவால் முடியும். எந்த பந்துவீச்சாளரை வாங்குவது என்பது குறித்து நிர்வாகம் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது. அடுத்த வாரம், எந்த பௌலரை வாங்குவார்கள் என்பது குறித்து தகவல் வெளியாகிவிடும். தஷுன் ஷனாவை அவர்கள் வாங்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement