
Latif's huge claim on 31-year-old India star (Image Source: Google)
ஐபிஎல் தொடரின் மூலம் தன்னை கிரிக்கெட் உலகிற்கு அறிமுகப்படுத்தி கொண்ட சூர்யகுமார் யாதவ், பல வருட போராட்டத்திற்கு பிறகு இந்திய அணியிலும் கால் பதித்தார்.
ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடினாலும், இந்திய அணிக்காக விளையாடும் போது பல வீரர்கள் சொதப்பியே வருகின்றனர். மிக சில வீரர்களே தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி, இந்திய அணியில் தங்களுக்கான இடத்தை உறுதி செய்து கொள்கின்றனர். அதில் சூர்யகுமார் யாதவும் ஒருவர்.
ஐபிஎல் தொடருக்காக விளையாடியதை விட, இந்திய அணிக்காக ஒவ்வொரு போட்டியிலும் மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சூர்யகுமார் யாதவ், மிடில் ஆர்டரில் இந்திய அணியின் அசைக்க முடியாத நம்பிக்கையாக திகழ்ந்து வருகிறார்.