
டெல்லி கேப்பிட்டல்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி இன்று டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியானது ஜேக் ஃபிரேசர் மெக்குர்க், ஷாய் ஹோப், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஆகியோரது அதிரடியான ஆட்டத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 257 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக ஜேக் ஃபிரேசர் மெக்குர்க் 84 ரன்களையும், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 48 ரன்களையும், ஷாய் ஹோப் 41 ரன்களையும் சேர்த்தனர்.
இதையடுத்து இமாலய இலக்கை நோக்கி விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணியில் நட்சத்திர வீரர்களான ரோஹித் சர்மா, இஷான் கிஷான், சூர்யகுமார் யாதவ் போன்ற வீரர்கள் சோபிக்க தவறினர் அதன்பின் களமிறங்கிய கேப்டன் ஹர்திக் பாண்டியா அதிரடியாக விளையாடி 46 ரன்களையும், தில் வர்மா 63 ரன்கள் சேர்த்த நிலையிலும், மும்பை இந்தியன்ஸ் அணியால் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 247 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இதன்மூலம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.
இந்நிலையில் இப்போட்டியின் தோல்வி குறித்து பேசிய மும்பை அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா, “சமீப காலங்களில் டி20 கிரிக்கெட் போட்டிகளில் நெருக்கமான போட்டிகளாக அமைந்து வருகிறது. அதிலும் முன்பெல்லாம் இரண்டு அல்லது மூன்று ஓவர்கள் போட்டியின் முடிவை மாற்ற வித்தியாசமாக இருந்த நிலையில், அது தற்போது இரண்டு, மூன்று பந்துகள் வித்தியாசத்தில் முடிவுகளை மாற்றி விடுகிறது. இதுபோன்ற போட்டிகளால் பந்துவீச்சாளர்கள் தொடர்ந்து அழுத்தத்துடன் இருக்கின்றனர்.