
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக தனது சொந்த மண்ணில் இந்தியா பங்கேற்கும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் அதிரடியான துவக்கத்தை பெற்றுள்ளது. இத்தொடரின் முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்று, 1 – 0* என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது.
இதையடுத்து ஜூன் 12இல் ஒடிசா மாநிலம் கட்டாக் நகரில் நடைபெறும் 2ஆவது போட்டியில் எப்படியாவது வென்று தென் ஆப்பிரிக்காவுக்கு தக்க பதிலடி கொடுத்து தொடரை சமன் செய்ய இந்தியா போராட உள்ளது. முன்னதாக டெல்லியில் நடைபெற்ற முதல் போட்டியில் சமீபத்திய ஐபிஎல் தொடரில் அதிவேகமான பந்துகளை அசால்டாக வீசி அனைவரின் கவனத்தை ஈர்த்த 22 வயது இளம் வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக் அறிமுகமாக களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் பெரும்பாலான போட்டிகளில் வேகத்திற்கு ஈடாக ரன்களை வாரி வழங்கியதாலும் ஹர்ஷல் படேல் போன்ற சீனியர் பவுலர்கள் இருப்பதாலும் எதார்த்த அடிப்படையில் உம்ரானுக்கு பொறுமையாகத்தான் வாய்ப்பு வழங்கப்படும் என்று பயிற்சியாளர் ராகுல் டிராவிட் அறிவித்துவிட்டார்.