
ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் 5ஆம் தேதி முதல் இந்தியாவில் துவங்கவுள்ளது. இந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு முன்பாக தற்போது அனைத்து அணிகளும் தலா 2 போட்டிகள் கொண்ட பயிற்சி போட்டிகளில் பங்கேற்று விளையாடி வருகின்றன. அந்த வகையில் இந்திய அணி கவுஹாத்தி மைதானத்தில் இன்று செப்டம்பர் 30ஆம் தேதி இங்கிலாந்து அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் விளையாட இருந்தது.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இந்த பயிற்சி போட்டி மதியம் 2 மணிக்கு துவங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் தொடர்ந்து பெய்த மழை காரணமாக போட்டி கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இப்படி இரண்டு பயிற்சி போட்டிகள் மட்டுமே இந்திய அணிக்கு இருந்த வேளையில் முதலாவது போட்டி கைவிடப்பட்டது ரசிகர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இந்த பயிற்சி போட்டிக்கு முன்னதாக தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் அளித்த பேட்டி ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் பேசிய அஸ்வின், “உண்மையை கூற வேண்டும் என்றால் நான் உலகக்கோப்பை தொடருக்காக தேர்வாகி இங்கு நிற்பேன் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை. கடந்த நான்கு-ஐந்து ஆண்டுகளாகவே நான் விளையாடும் கிரிக்கெட்டை மிகவும் ரசித்து மகிழ்ச்சியுடன் விளையாடி வருகிறேன்.