தோனியின் வார்த்தைகள் தான் தம்மை மீட்டது - அஸ்வின்
தனது கடினமான காலங்களில் எம் எஸ் தோனியின் வார்த்தைகள் தான் தம்மை மீட்டதாக ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.

'Like MS Dhoni always said..': R Ashwin recalls former India captain's words (Image Source: Google)
ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி புகழ் பெற்று, பின் இந்திய அணியின் தவிர்க்க முடியாத வீரராக உருவெடுத்தார் தமிழ்நாட்டைச் சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின்.
இந்த நிலையில் அஸ்வின் தனது இருண்ட கால பக்கங்கள் குறித்து இணையத்தளம் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அதில் 2018-19ஆம் ஆண்டு காயத்தால் அவதிப்பட்டு வந்ததாகவும், அதனால் மனதளவில் பாதிக்கப்பட்டு மன உளைச்சலில் இருந்ததாகவும் கூறினார். காயத்திலிருந்து குணமடைந்துவிடுவேன் ஆனால் எப்படி, எப்போது என்று தெரியவில்லை என்று புலம்பினேன் என்று அஸ்வின் கூறினார்.
அப்போது தோனி சொன்ன வார்த்தைகள் தான் தம்மை மீட்டதாக அஸ்வின் தெரிவித்தார். பயிற்சியை மட்டும் விட்டுவிடாதீர்கள், முடிவை எதிர்பார்க்காமல் தொடர்ந்து பயிற்சி செய்தால், எல்லாம் சரியாக நடக்கும் என்று தோனி கூறியது தான் நினைவுக்கு வந்ததாகவும், அதனை வைத்து காயத்திலிருந்து மீள்வதற்கான பணிகளை மட்டும் செய்தேன் என்றார்.
ஐபிஎல் தொடரில் மீண்டும் சென்னை அணிக்காக விளையாடினால் மகிழ்ச்சி என்றும் அஸ்வின் விருப்பம் தெரிவித்தார். அஸ்வினின் பேச்சில் உண்மை இருக்கிறது. எனினும் ஐபிஎல் ஏலம் நெருங்கும் நிலையில், தோனியை புகழ்ந்து அஸ்வின் பேசியதால், அவர் சென்னை அணிக்கு திரும்பும் முயற்சியை எடுத்துள்ளதாக கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.
Advertisement
Win Big, Make Your Cricket Tales Now
கிரிக்கெட்: Tamil Cricket News