Advertisement

இதன் காரணமாகவே சிஎஸ்கேவிடம் தோற்றோம் - பொல்லார்ட் ஓபன் டாக்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிரான போட்டியில் தோல்வியடைந்தது குறித்து மும்பை இந்தியன்ஸ் கேப்டன் கீரன் பொல்லார்ட் மனம் திறந்து பேசியுள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan September 20, 2021 • 10:48 AM
Losing Three Wickets Was A Cardinal Sin For Us: MI Captain Pollard
Losing Three Wickets Was A Cardinal Sin For Us: MI Captain Pollard (Image Source: Google)
Advertisement

நேற்றைய போட்டியில் சிஎஸ்கே அணியிடம் தோல்வியடைந்தது குறித்து பேசிய மும்பை அணியின் கேப்டன் பொல்லார்டு கூறுகையில், “இந்த போட்டியில் நாங்கள் நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்திருக்க வேண்டும். ஆனால் இந்த போட்டியில் நாங்கள் அதை செய்யத் தவறிவிட்டோம். இறுதியில் 20 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது இந்த போட்டியில் பெரிய வித்தியாசமாக அமைந்தது. 

ஏனெனில் பந்துவீசும் போது நாங்கள் இறுதியில் அதிகமாக ரன்களை விட்டுக்கொடுத்து விட்டோம். அந்த ரன்களே எங்களுக்கு பாதகமாக அமைந்தது. சென்னை அணி விக்கெட்டுகள் விழுந்தாலும், ரன்குவிப்பை அப்படியே கொண்டு செல்ல நினைத்தனர்.

Trending


Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021

ஆனால் நாங்கள் அதனை செய்ய தவறி விட்டோம். இந்த போட்டியில் பவர் பிளேயில் விக்கெட்டை விட்டால் என்ன ஆகும் என்பதை நாங்கள் கற்றுக் கொள்ள வேண்டும். இதுபோன்ற அளவிலான போட்டிகளில் நன்றாக செயல்படுவது அவசியம். இருப்பினும் எங்களுக்கு இன்னும் 6 போட்டிகள் உள்ளதால் நாங்கள் வலுவாக திரும்பி வருவோம்” என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement