
ஐபிஎல் 16ஆவது சீசனில் நேற்று நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸ் அணியும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் மோதிக்கொண்டன. இந்த போட்டியில் டாசை வென்ற ஹைதராபாத் முதலில் பந்து வீச, பேட்டிங் செய்ய வந்த பஞ்சாபுக்கு எல்லாமே அதிர்ச்சியாகத்தான் இருந்தது.
பதினைந்து ஓவர்களில் 88 ரன்களுக்கு ஒன்பது விக்கட்டுகளை இழந்த பஞ்சாப் அணிக்கு, தனி ஒரு வீரனாக நின்று பஞ்சாப் அணியின் கேப்டன் ஷிகர் தவான் அற்புதமாக விளையாடி 66 பந்துகளில் 12 பவுண்டரி ஐந்து சிக்ஸர்கள் உடன் 99 ரன்களை ஆட்டம் இழக்காமல் குவித்தார். இதன் மூலம் பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 9 விக்கட்டுகள் இழப்பிற்கு 143 ரன்கள் எடுத்தது.
தொடர்ந்து விளையாடிய ஹைதராபாத் அணி இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 17.1 எட்டு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அந்த அணியின் ராகுல் திரிபாதி ஆட்டம் இழக்காமல் 48 பந்துகளில் 10 பவுண்டரி மூன்று சிக்ஸர்கள் உடன் 71 ரன்கள் எடுத்தார். கேப்டன் மார்க்ரம் 21 பந்துகளில் ஆறு பவுண்டரிகள் உடன் 37 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் நின்றார்.