
இலங்கையில் உள்ளூர் டி20 தொடரான் லங்கா பிரீமியர் லீக் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 10ஆவது லீக் ஆட்டத்தில் கொழும்பு ஸ்டார்ஸ் - ஜாஃப்னா கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் டாஸ் வென்ற கொழும்பு ஸ்டார்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய ஜாஃப்னா கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர் குர்பாஸ் 17 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் ஜோடி சேர்ந்த அவிஷ்கா - ரந்திகா இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
பின் 32 ரன்களில் அவிஷ்கா ஃபெர்னாண்டோவும், 27 ரன்களில் ரந்திகாவும் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய சமரவிக்ரமா 32 ரன்களுடன் பெவிலியன் திரும்பினார். இதையடுத்து களமிறங்கிய சோயிப் மாலிக் கடைசிவரை ஆட்டமிழக்காமல் 35 ரன்களைச் சேர்த்து அசத்தினார். கேப்டன் திசாரா பெரேரா தனது பங்கிறகு 29 ரன்களைச் சேர்த்தார்.