Advertisement

எல்பிஎல் 2023: பரபரப்பான ஆட்டத்தில் தம்புலாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது கண்டி!

தம்புலா ஆரா அணிக்கெதிரான எல்பிஎல் இறுதிப்போட்டியில் பி லௌவ் கண்டி அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, சாம்பியன் பட்டத்தையும் தட்டிச்சென்றது.

Bharathi Kannan
By Bharathi Kannan August 20, 2023 • 23:34 PM
எல்பிஎல் 2023: பரபரப்பான ஆட்டத்தில் தம்புலாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது கண்டி!
எல்பிஎல் 2023: பரபரப்பான ஆட்டத்தில் தம்புலாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது கண்டி! (Image Source: Google)
Advertisement

இலங்கையில் நடைபெற்றுவரும் லங்கா பிரீமியர் லீக் தொடரின் 4ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் வநிந்து ஹசரங்கா தலைமையிலான பி லௌவ் கண்டி அணியும், குசால் மெண்டிஸ் தலைமையிலான தம்புலா ஆரா அணியும் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள தம்புலா அணியின் கேப்டன் குசால் மெண்டிஸ் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளார். 

இந்நிலையில் காயம் காரணமாக கண்டி அணியின் கேப்டன் வநிந்து ஹசரங்கா இன்றைய போட்டியில் விளையாடவில்லை. அவருக்கு பதிலாக மூத்த வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் கேப்டன் பொறுப்பை ஏற்று அணியை வழிநடத்தினார். 

Trending


இதையடுத்து இன்னிங்ஸைத் தொடங்கிய தம்புலா அணியில் தொடக்க வீரர் அவிஷ்கா ஃபெர்னாண்டோ 5 ரன்களுக்கும், கேப்டன் குசால் மெண்டிஸ் 22 ரன்களுக்கும் என விக்கெட்டுகளை இழந்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த சமரவிக்ரமா - குசால் பெரேரா இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தியது.

பின் 36 ரன்களில் சமரவிக்ரமா ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கி அதிரடி காட்டிய தனஞ்செயா டி சில்வா 40 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார். இருப்பினும் இறுதிவரை களத்தில் இருந்த குசால் பெரேரா 31 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் தம்புலா ஆரா அணி 147 ரன்களை மட்டுமே சேர்த்தது. 

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய கண்டி அணிக்கு முகமது ஹாரிஸ் - கமிந்து மெண்டிஸ் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அசத்தினர். பின் 26 ரன்களில் ஹாரிஸ் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கமிந்து மெண்டிஸும் விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய தினேஷ் சண்டிமல் 24, ஆசிஃப் அலி 19 ரன்கள் என விக்கெட்டை இழந்தனர். 

இருப்பினும் கடைசி வரை களத்தில் இருந்த கேப்டன் ஏஞ்சலோ மேத்யூஸ் அணிக்கு தேவையான ரன்களைச் சேர்த்து வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் பி லௌவ் கண்டி அணி 19.5 ஓவர்களில் இலக்கை எட்டியதுன் 5 விக்கெட் வித்தியாசத்தில் தம்புலா ஆரா அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது. இந்த வெற்றியின் மூலம் நடப்பாண்டு லங்கா பிரீமியர் லீக் தொடரில் பி லௌவ் கண்டி அணி சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றி அசத்தியது. 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement