
Lucknow would need Rahul 'the batter who leads' rather than 'captain who also bats': Mentor Gautam G (Image Source: Google)
ஐபிஎல் தொடரின் 15ஆவது சீசன் வருகிற 26ஆம் தேதி தொடங்குகிறது. 10 அணிகள் பங்கேற்கும் இப்போட்டியில் புதிய அணியாக லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் விளையாடுகிறது.
லக்னோ அணிக்கு லோகேஷ் ராகுல் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் அந்த அணிக்கு ஆலோசகராக முன்னாள் வீரர் கவுதம் காம்பீர் உள்ளார்.
லக்னோ தலைமை உள்ளிட்டவைகள் குறித்து கவுதம் காம்பீர் பேசும் போது, “என்னை பொறுத்தவரை கேப்டனாக இருக்கும் ராகுலைவிட, பேட்டிங்கில் ரன் குவிக்கும் கேப்டனாக இருக்கும் ராகுலாக இருப்பது முக்கியம். ராகுல் தனது அணுகுமுறையில் அச்சமின்றி இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அதற்காக அவருக்கு எல்லா சுதந்திரமும் கிடைக்கும்.