Advertisement

ஐபிஎல் 2022: புதிய அணிகளுக்கான ஏலாம் நாளை நடைபெறுகிறது!

பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே, நடிகர் ரன்வீர் மற்றும் மான்செஸ்டர் யுனைடெட் உள்பட, சில தனியார் நிறுவனங்கள் என 22 நிறுவனங்கள் ஐபிஎல் அணிகளை வாங்க ஆர்வமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Bharathi Kannan
By Bharathi Kannan October 24, 2021 • 13:52 PM
Manchester United owners, Adani Group among 22 entities bidding for new IPL teams
Manchester United owners, Adani Group among 22 entities bidding for new IPL teams (Image Source: Google)
Advertisement

கடந்த 2008ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் இன்று உலக கிரிக்கெட் ரசிகர்களின் மிகபெரும் தொடராக பார்க்கப்பட்டு வருகிறது. பல்வேறு நாட்டு வீரர்கள் ஒரு அணியில் விளையாடியதால் ரசிகர்கள் மத்தியில் இந்த போட்டிக்கு பெரும் வரவேற்பு இருந்தது.வர்த்தக ரீதியிலும் இந்த போட்டி மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

ஐபிஎல் தொடரில் தற்போது 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. அடுத்த ஆண்டு நடைபெறும் 15ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் கூடுதலாக 2 அணிகள் இடம் பெறுகின்றன. மொத்தம் 10 அணிகள் அடுத்த சீசனில் விளையாடும்.

Trending


ஐபிஎல் புதிய அணிகளுக்கான ஏலம் டெண்டர் நடைமுறையை பிசிசிஐ கடந்த ஆகஸ்டு மாதம் இறுதியில் வெளியிட்டது. டெண்டருக்கான விண்ணப்பம் ரூ.10 லட்சம் ஆகும். இந்த தொகை திரும்ப வழங்கப்பட மாட்டாது.

ஐபிஎல் தொடரின் 2 புதிய அணிகளுக்கான ஏலம் நாளை நடக்கிறது. ஒவ்வொரு அணியின் அடிப்படை விலை ரூ.2 ஆயிரம் கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நாளை நடைபெறும் இந்த ஏலத்தில் அதானி குழுமம், அகமதாபாத்தை சேர்ந்த ஒரு கட்டுமான நிறுவனம், சஞ்சீவ் கோயங்காவின் ஆர்.பி.எஸ்.ஜி. குழுமம், நவீன் ஜிண்டாலின் ஜிண்டால் ஸ்டீல், அரபிந்தோ மருந்து நிறுவனம், இங்கிலாந்தின் கால்பந்து கிளப்பான மான்செஸ்டர் யுனைடெட், பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே, நடிகர் ரன்வீர் மற்றும் சில தனியார் நிறுவனங்கள் என 22 நிறுவனங்கள் ஐபிஎல் அணிகளை வாங்க ஆர்வமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அகமதாபாத், கட்டாக், தர்மசாலா, கவுகாத்தி, இந்தூர், லக்னோ ஆகிய நகரங்களை மையமாக வைத்தே அணிகளின் ஏலம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு நிறுவனம் எத்தனை பெயர்களுக்கு வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம்.

Also Read: டி20 உலகக் கோப்பை 2021

அகமதாபாத், லக்னோ ஆகிய நகரங்களை அடிப்படையாகக் கொண்டு ஐ.பி.எல். புதிய அணிகள் அமைய அதிக வாய்ப்பு இருக்கிறது. ஐபிஎல்லின் 2 புதிய அணிகள் எவை? யார் வாங்கியுள்ளனர் என்ற விவரத்தை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் நாளை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இரு புதிய அணிகள் மூலம் கிரிக்கெட் வாரியத்துக்கு ரூ.7 ஆயிரம் கோடி கிடைக்கும் என்று கருதப்படுகிறது.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement