
வீரர்களை வரம்பு மீறி விமர்சனம் செய்ததற்காக சஞ்சய் மஞ்சரேக்கருக்கு கிரிக்கெட் வர்ணனை செய்யும் வாய்ப்பு தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது. ஆனால், சஞ்சய் மஞ்ச்ரேக்கர் திருத்திய மாதிரியே தெரியவில்லை. ஜடேஜா எல்லாம் ஒரு கிரிக்கெட் வீரரே இல்லை என்று தெரிவித்து சர்ச்சையில் சிக்கினார்.
தற்போது அவர் பார்வை தமிழக வீரர் அஸ்வின் மீது திரும்பியுள்ளது. இதுகுறித்து பேசிய அவர், “இந்திய அணியின் வேகப்பந்துவீச்சின் தரம் சிறந்ததாக இருக்கிறது. ஆனால், அதே போல் தான் பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா போன்ற அணியிலும் இருக்கிறது. இதனால் வேகப்பந்துவீச்சாளர்கள் மட்டும் சிறப்பாக பந்துவீசினால் போதாது, இந்திய அணி சுழற்பந்துவீச்சாளர்களும் சிறந்த பங்களிப்பை தர வேண்டும்.
இந்திய அணி ராகுல் சாஹர், அஸ்வின், வருண் சக்ரவர்த்தியை இனி பரிசீலினை செய்யாது. அவர்களுக்கு பதில் சாஹல், ரவி பிஸ்னாய், குல்தீப், அக்சர் பட்டேல், ஜடேஜா ஆகியோருக்கு தான் இனி வாய்ப்பு கொடுக்கும். நான் விரும்புவது குல்தீப் யாதவும் பிளேயிங் லெவனில் இடம்பெற வேண்டும் என்பதே.