
many-players-refused-to-get-vaccinated-before-ipl-2021 (Image Source: Google)
இந்தியாவில் வீசும் கரோனா 2வது அலை காரணமாக, ஐபிஎல் 2021 தொடர் பாதியிலேயே நிறுத்தப்பட்டு மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்திய வீரர்கள் தங்கள் மாநிலங்களுக்கு திரும்ப, வெளிநாட்டு வீரர்கள் பலர் மாலத்தீவு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அதில் குறிப்பாக, ஆஸ்திரேலிய வீரர்கள். அவர்கள் நாளை (மே.16) ஆஸ்திரேலியா திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 10 நாட்களுக்கு மேலாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவந்த சிஎஸ்கே அணியின் பேட்டிங் பயிற்சியாளரும், ஆஸ்திரேலிய முன்னாள் வீரருமான மைக் ஹஸ்ஸிக்கு, நேற்று நான்காவது முறையாக எடுக்கப்பட்ட பரிசோதனையில் 'நெகட்டிவ்' என்று வந்ததால் அவர் சென்னையை விட்டு வெளியேற திட்டமிட்டுள்ளார்.