Advertisement

ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத மேத்யூஸ்; இந்திய தொடரிலிருந்து வெளியேற்றம்!

இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் வீரர்களுக்கான புதிய ஒப்பந்தத்தில் அந்த அணியின் முன்னாள் கேப்டன் ஆஞ்சலோ மேத்யூஸ், திமுத் கருணரத்னே ஆகியோர் கையெழுத்திட மறுத்துள்ளனர்.

Bharathi Kannan
By Bharathi Kannan July 07, 2021 • 15:47 PM
Mathews, Karunaratne Left Out As Sri Lanka Cricketers Sign New Contracts
Mathews, Karunaratne Left Out As Sri Lanka Cricketers Sign New Contracts (Image Source: Google)
Advertisement

ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடவுள்ளது. இத்தொடருக்காக இந்திய அணி வீரர்கள் வலைபயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில் இத்தொடருக்கான இலங்கை அணி இன்று அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இத்தொடரில் பங்கேற்கும் 30 வீரர்களும் இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என்றும் அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தெரிவித்திருந்தது. 

Trending


ஆனால் இந்த ஒப்பந்தத்தில் இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் அஞ்சலோ மேத்யூஸ், திமுத் கருணரத்னே ஆகியோர் கையெழுத்திட மறுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இவர்கள் இருவரும் இந்திய அணிக்கெதிரான தொடரில் விளையாடமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. 

அதேசமயம் அணியின் மற்ற வீரர்கள் இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர். மேலும் மேத்யூஸ் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடாததால் அவர் ஓய்வை அறிவிப்பார் என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement