
ஆசிய கோப்பை தொடருக்கான 17 பேர் கொண்ட இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இந்த அணி அறிவிப்பில் தொடர்ந்து இந்திய அணியில் இருந்து வந்த சாகல் நீக்கப்பட்டு இருக்கிறார். அதே சமயத்தில் இதுவரை ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் சர்வதேச அளவில் விளையாடாத இருபது வயதான திலக் வர்மா தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார். இது பலரும் விரும்பிய முடிவாக இருக்கிறது.
அதே சமயத்தில் தொடர்ந்து ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் சொதப்பி வரும் சூர்யகுமார் யாதவ் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஒரு நாள் கிரிக்கெட்டில் கிடைத்த வாய்ப்பில் சிறப்பாக செயல்பட்டு இருக்கும் சஞ்சு சம்சனை பேக்கப் வீரராக வெளியே வைத்திருக்கிறார்கள். ஆசிய கோப்பை இந்திய அணி தேர்வில் மிக முக்கிய விவாதங்களாக இருப்பது இந்த மூன்று விஷயங்களும்தான். மற்றபடி காயத்தில் இருந்து ஸ்ரேயாஸ் மற்றும் கே எல் ராகுல் இருவரும் திரும்பி வந்திருப்பது இந்திய அணிக்கு நல்ல செய்தி.
ஆசிய கோப்பை இந்திய அணி தேர்வு குறித்து பேசி உள்ள ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன், "இந்தியாவிற்கு அதீத பேட்டிங் திறமை இருக்கிறது. கில் தனது நாட்டுக்காக இன்னும் அதிக போட்டிகளில் விளையாட வில்லை. திலக் வர்மா தன் நாட்டுக்காக இன்னும் விளையாட ஆரம்பிக்கவில்லை. இதனால் இவர்களால் அணிக்கு தேவையானதை வழங்க முடியாது என்பது கிடையாது. இப்படி முற்றிலும் பூஜ்ஜியமாக இருக்கும் வீரர்கள் ஐபிஎல் தொடரில் என்ன செய்தார்கள் என்று நாம் பார்த்திருக்கிறோம். ஐபிஎல் சர்வதேச கிரிக்கெட் வேறு வேறுதான். ஆனாலும் இவர்கள் திறமையானவர்கள்.