
ஐபிஎல் தொடரில் இன்று நடந்துவரும் வாழ்வா சாவா என்ற போட்டியில் உள்ள பெங்களூரு அணி டாஸை தோற்று பந்துவீச பணிக்கப்பட்டது. குஜராத் அணி வீரர்கள் பெரிய இலக்கை நிர்ணயித்து கடும் நெருக்கடி தரும் முனைப்பில் தங்களது இன்னிங்சை தொடங்கினர்.
சுப்மான் கில் 1 ரன்னில் ஆட்டமிழக்க, சாஹா , மேத்தீவ் வேட் ஜோடி அதிரடியாக விளையாடி ரன்களை உயர்த்த பார்த்தனர். மேத்தீவ் வேட் 13 பந்துகளில் 16 ரன்கள் எடுத்து 2 பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசி இருந்தார். ஆஸ்திரேலியாவுக்கு டி20 உலககோப்பை வாங்கி தந்தவர்களில் மிக முக்கியமான நபர் பார்ம்க்கு திரும்பிவிட்டதாக குஜராத் ரசிகர்கள் நினைத்தனர்.
ஆனால் 5.2வது ஓவரில் தான் மேத்தீவ் வேட்க்கு நடுவர் வேட்டு வைத்து விட்டார். மெக்ஸ்வேல் வீசிய பந்தை ஸ்விப் செய்ய மேத்தீவ் வேட் முயன்றார். அப்போது பந்து காலில் பட்டது. இதற்கு கள நடுவர் அவுட் கொடுத்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த மேத்தீவ் வெட் மூன்றாம் நடுவரின் உதவியை நாடினார்.