ஐபிஎல் 2025: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுடன் இணைந்த மயங்க் யாதவ்!
காயம் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை விளையாடாமால் இருந்து வந்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் மயங்க் யாதவ் அணி முகாமுக்குத் திரும்பியுள்ளார்.

ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை அதிகரித்து வருகிறது. இதில் இதுவரை நடந்து முடிந்த போட்டிகளின் அடிப்படையில் புள்ளிப்பட்டியலில் குஜராத் டைட்டன்ஸ் அணி முதலிடத்திலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடைசி இடத்திலும் உள்ளது.
இதனால் எதிர்வரும் போட்டிகளில் முடிவில் எந்த நான்கு அணிகள் புள்ளிப்பட்டியலின் டாப் 4 இடங்களை பிடித்து பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. அந்தவகையில் ரிஷப் பந்த தலைமையில் நடப்பு ஐபிஎல் தொடரை எதிர்கொண்டுள்ள லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் சிறப்பாக செயல்பட்டதுடன் விளையாடிய 7 போட்டிகளில் 4 வெற்றி 3 தோல்விகளைச் சந்தித்து புள்ளிப்பட்டியலின் 5ஆம் இடத்தில் உள்ளது.
Also Read
அதிலும் குறிப்பாக கடந்த போட்டியில் அந்த அணி இறுதிவரை போராடிய நிலையிலும் சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிராக தோல்வியைத் தழுவியது. இதனையடுத்து அந்த அணி அடுத்ததாக ஏப்ரல் 19ஆம் தேதி ஜெய்ப்பூரில் நடைபெறும் லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸை எதிர்த்து விளையாடவுள்ளது. இதற்காக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியானது தீவிரமாக தயாராகியும் வருகின்றது. இந்நிலையில் இப்போட்டிக்கு முன்னதாக லக்னோ அணிக்கு மிகப்பெரும் நற்செய்தி கிடைத்துள்ளது.
அதன்படி காயம் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை விளையாடாமால் இருந்து வந்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் மயங்க் யாதவ் அணி முகாமுக்குத் திரும்பியுள்ளார். இதன் மூலம் அவர் தற்சமயம் முழு உடற்தகுதியை எட்டியுள்ளதாகவும், விரைவில் அவர் மீண்டும் களமிறங்க வாய்ப்புள்ளது என்றும் கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக எதிர்வரும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் மூலம் அவர் கம்பேக் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேற்கொண்டு மயங்க் யாதவ் அணியில் இணைந்ததை உறுதிப்படுத்தும் வகையில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி தங்களுடைய அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கங்களில் காணொளி ஒன்றையும் வெளியிட்டுள்ளது. முன்னதாக முதுகு மற்றும் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக கிரிக்கெட்டில் இருந்து விலகி இருந்த மயங்க் யாதவ் தற்போது மீண்டும் விளையாடவுள்ளது அவரது ரசிகர்களை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
— Lucknow Super Giants (@LucknowIPL) April 16, 2025
முன்னதாக கடந்தாண்டு வங்கதேச அணிக்கு எதிரான டி20 தொடரின் போது சர்வதேச கிரிக்கெட்டில் மயங்க் யாதவ் அறிமுகமானார். அத்தொடரில் ரசிகர்களில் கவனத்தை ஈர்த்த அவர், தொடரின் இறுதியில் காயத்தை சந்தித்தார். அதன்பின் காயத்திற்காக சிகிச்சை மேற்கொண்டு வந்த மயங்க் யாதவ் முழு உடற்தகுதியை எட்டும் முயற்சியில் தேசிய கிரிக்கெட் அகாடாமியில் பயிற்சி மேற்கொண்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read: Funding To Save Test Cricket
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்: நிக்கோலஸ் பூரன், ரவி பிஷ்னோய், மயங்க் யாதவ், மொஹ்சின் கான், ஆயுஷ் பதோனி, ரிஷப் பந்த் (கேப்டன்), டேவிட் மில்லர், ஐடன் மார்க்ரம், மிட்செல் மார்ஷ், அவேஷ் கான், அப்துல் சமத், ஆர்யன் ஜூயல், ஆகாஷ் தீப், ஹிம்மத் சிங், சித்தார்த், திக்வேஷ் சிங், ஷாபாஸ் அகமது, ஆகாஷ் சிங், ஷமர் ஜோசப், பிரின்ஸ் யாதவ், யுவராஜ் சவுத்ரி, ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், அர்ஷின் குல்கர்னி, மேத்யூ பிரீட்ஸ்கி
Win Big, Make Your Cricket Tales Now