X close
X close

உலகக்கோப்பை தகுதிச்சுற்று : முக்கிய வீரர்களின்றி களமிறங்கும் நெதர்லாந்து!

ஜிம்பாப்வேவில் நடைபெறவுள்ள ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் தகுதிச்சுற்று போட்டிக்கான 15 பேர் அடங்கிய நெதர்லாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan May 24, 2023 • 23:00 PM

ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் அக்டோபர் மாதம் இந்தியாவில் நடைபெற உள்ளது. சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் இந்தத் தொடர் நடைபெறுகிறது. இதில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்கவுள்ள நிலையில், போட்டியை நடத்தும் இந்தியா உள்பட 8 அணிகள் பிரதான சுற்றுக்கு நேரடியாகத் தகுதிபெற்றுவிட்டன. எஞ்சியிருக்கும் 2 இடங்களுக்கான அணிகள் தகுதிச்சுற்று ஆட்டங்கள் மூலம் முடிவு செய்யப்படவுள்ளன.

அதன்படி ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டிக்கான தகுதிச்சுற்று ஆட்டங்கள் ஜிம்பாப்வேயில் ஜூன் 18இல் தொடங்கி ஜூலை 9ஆஆம் தேதி நிறைவடைகின்றன. இதில் பங்கேற்கும் 10 அணிகளும் குரூப் ‘ஏ’, ‘பி’ என இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் இருக்கும் இதர அணிகளுடன் மோதும்.

Trending


இதில் குரூப் ஏ பிரிவில் இடம்பிடித்துள்ள நெதர்லாந்து 15 பேர் அடங்கிய அணியை இன்று அறிவித்துள்ளது. ஸ்காட் எட்வர்ட்ஸ் தலைமையிலான அணியில் மேக்ஸ் ஓடவுட், விக்ரம்ஜிட் சிங், பாஸ் டி லீட், லோகன் வேன் பீக் போன்ற நட்சத்திர வீரர்கள் இடம்பிடித்துள்ளனர். அதேசமயம் காலின் அக்கர்மேன், ஃப்ரெட் கிளாசென், வாண்டெர் மோர்வ், பால் வான் மீகெரன், பிராண்டன் குளோவர் போன்ற பிரபல வீரர்களுக்கு இந்த அணியில் இடம் கிடைக்கவில்லை. 

நெதர்லாந்து அணி: ஸ்காட் எட்வர்ட்ஸ் (கேப்டன்), மேக்ஸ் ஓ'டவுட், லோகன் வான் பீக், விக்ரம்ஜித் சிங், ஆர்யன் தத், விவ் கிங்மா, பாஸ் டி லீடே, நோவா குரோஸ், ரியான் க்ளீன், தேஜா நிடமனுரு, வெஸ்லி பாரேசி, ஷாரிஸ் அஹ்மத், கிளேட்டன் ஃபிலாய்ட், மைக்கேல் லெவிட், சாகிப் சுல்ஃபிகர். 


Win Big, Make Your Cricket Tales Now