
ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று மதியம் 2 மணிக்கு மும்பையில் நடைபெறும் முதல் அரையிறுதியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. அதில் லீக் சுற்றில் தோல்வியை சந்திக்காமல் புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்த இந்தியா 4ஆவது இடத்தை பிடித்த நியூசிலாந்தை தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு செல்லுமா என்ற ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு காணப்படுகிறது.
இருப்பினும் 2013க்குப்பின் ஐசிசி தொடர்களில் இதே போல லீக் சுற்றில் அசத்தும் இந்தியா நாக் அவுட் சுற்றில் ஏதோ ஒரு வகையில் சொதப்பி தோல்வியை சந்தித்து வருகிறது. அதை விட 2019 அரையிறுதி உட்பட நியூசிலாந்துக்கு எதிராக ஐசிசி தொடர்களில் இதுவரை விளையாடிய 3 நாக் அவுட் போட்டிகளிலும் இந்தியா தோல்வியை சந்தித்துள்ளது ரசிகர்களுக்கு மிகப்பெரிய கவலையாக இருக்கிறது.
இந்நிலையில் அரையிறுதியில் வெற்றி தோல்வியைப் பற்றி கவலைப்படாமல் பயமின்றி விளையாடுங்கள் என்று இந்திய அணிக்கு வீரேந்திர சேவாக் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் 2011இல் தாங்கள் வெற்றி பெறுவதற்கு கொஞ்சம் தேவைப்பட்ட அதிர்ஷ்டம் தற்போதைய அணிக்கும் அவசியம் என்றும் தெரிவித்துள்ளார்.