
நாளை இந்திய அணி நடப்பு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் தனது ஏழாவது போட்டியில் இலங்கை அணிக்கு எதிராக மும்பை வான்கடே மைதானத்தில் விளையாட இருக்கிறது. தற்பொழுது ஆறு போட்டிகளை வென்று புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் இருந்தாலும் கூட, இந்திய அணி அதிகாரப்பூர்வமாக இன்னும் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்று விடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நாளைய போட்டியில் வெல்வதின் மூலம் இந்திய அணி முதல் அணியாக அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெறும். வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் காலில் காயமடைந்த ஹர்திக் பாண்டியா இலங்கைக்கு எதிரான போட்டியில் இடம்பெற மாட்டார் என்பது ஏற்கனவே தெளிவுபடுத்தப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவுக்க் எதிரான போட்டியிலும் அவர் விளையாடமாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் லீக் சுற்றின் கடைசி போட்டியான நெதர்லாந்து அணிக்கு எதிராக ஹர்திக் பாண்டியா களம் இறங்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அவரது இடத்தில் தமிழக வீரர் ரவீச்சந்திரன் அஸ்வின் களமிறங்க வாய்புள்ளதாக கூறப்படுகிறது.